Tuesday, 22 October 2019

நீலச்சிலுவை சாபங்கள்

நிலைமை ஒரு நாள் தலைகீழானது.
வனங்களின் ஆட்சியின் கீழ் வந்தன
நவீனப் பெருநகரங்கள்.

விருட்சங்களின் கால்களில் 
விழுந்து கதறுகின்றன 
கட்டடங்கள்.

உடைகளின்றி 
கொத்துக்கொத்தாக தொங்குகிறீர்கள்
கோழிகளின் சைக்கிள்களில்.

நறுக்கப்பட்ட 
மனிதவிரல்கள் கோர்த்த சரங்களை சார்த்தி 
துவங்குகிறது ஐந்தறிவுக்கோவிலின் பூசை.

தங்கள் வாடிக்கையாளர்களிடம்
நெஞ்செலும்பு நல்லதென சொன்னபடியே
லாவகமாக உங்கள் தோலை அகற்றும் வெள்ளாடுகள்.
( மர்மஉறுப்புகளையும் கேட்டு வாங்குமொரு கும்பல்)

பூஞ்செடிகளின் மரண ஊர்வலத்தில்
வழியெங்கும் தூவத்தேவை
நூற்றுக்கணக்கிலான காதுமடல்கள்.

இளகிய மனங்கொண்ட பூனைகள்
மனிதக்குட்டிகளை வளர்க்கக் கூடும்.

கதியின்றி நடுத்தெருவில்
தோழியைப்புணருகையில்
கல்லெறியாமல்
உங்களை கடக்கட்டும் நாய்கள்.







No comments:

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...