Friday, 7 August 2026

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

 



ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் பார்த்துவிட்டு எல்லா டீச்சர்களும் இது தேறாது என்று நகர்ந்துவிட்டனர் அவிலா டீச்சர் அப்படி நகர்ந்துபோய்விடவில்லை எப்படியாவது அவனை மாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பு தோன்றுகிறது 

ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த அவிலா டீச்சர் 

ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று அந்தக்குழந்தையின் நோட்டைப்பார்த்துக்கேட்கிறார்.

வெங்காயம் ....என்கிறது குழந்தை .

’ஏன் பட்டனை போடலை’ என்று அவிலா டீச்சர் கேட்கிறார். 

வெங்காயம் ....

நல்லாப்படிக்கனும் இப்படி அசமந்தமா இருக்கக்கூடாது என்று ஆலோசனை சொல்லி முடிப்பதற்க்குள்... 

வெங்காயம் என்கிறது அக்குழந்தை .

வெங்காயம் என்பது வசைசொல் அல்ல. ஆனால் அந்தக்குழந்தை அப்படி எல்லாவற்றிருக்கும் அதை ஒரு வசைச்சொல்லாகவே பயன்படுத்துகிறது என்பதால் அவிலா டீச்சர் யோசிக்கிறார். ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார் 

அடுத்த நாள் வகுப்பு தொடங்குகிறது.

இரட்டை வரி நோட் ஏன் எழுதலை?

’வெங்காயம்’ என்கிறது அந்தக்குழந்தை.

கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது

இரண்டாம் பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது. 

முதல் பெஞ்சிலிருந்து எழுந்து இன்னொரு குழந்தை ’தக்காளி’ என்கிறது.

குழந்தை எல்லா காய்கறிகளையும் திரும்பித்திரும்பி பார்க்கிறது. 

ஏன் ஷூ- வை சரியாகப்போடலை ?

வெங்காயம் என்கிறது குழந்தை . மறுபடியும் மூன்றாம் பெஞ்சில் பீட்ரூட் முளைக்கிறது . ஏழாம் பெஞ்சில் முட்டைக்கோஸ் முளைக்கிறது. நான்காம் பெஞ்சிலிருந்து கேரட் விளைகிறது. வகுப்பறையே காய்கறித்தோட்டமாகிப்போகிறது .மூன்று நாட்கள் இப்படி நடந்தபின் அந்தக்குழந்தை வெங்காயத்தை கைவிட்டுவிடுகிறது.


அவிலா டீச்சர் அதை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த குழந்தைக்கு தாவி விடுகிறார். ஒருவருட கால சித்திரவதைக்கு சட்டென அவிலா டீச்சரால் எப்படி தீர்வு தரமுடிகிறது என்கிற யோசனையில் தலைமை ஆசிரியர் மோவாயை சொறியத்தொடங்குகிறார்.

இப்படி பல்வேறு ஆசிரிய அணுகுமுறைகளை குறுமக்கள் கொட்டாரம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் வெறும் அறிவைப் பகிரும் அதிகாரம் பெற்ற நபர் அல்ல; அவர் குழந்தையின் உணர்ச்சி மேலாண்மையைத் தீர்மானிக்கும் ‘பாதுகாப்பான புகலிடம்’ . ஆசிரியர் தனது சொந்தக் கவலைகள், சமூக அழுத்தம் மற்றும் அதிகார மனப்பான்மை போன்ற ‘ஆசிரிய உளவியல் சிக்கல்களைக்’ கடந்து, குழந்தையின் உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கும்போதே உண்மையான கற்பித்தல் நிகழ்கிறது.இப்படி தன் அதிகாரப் படிநிலையைக் கழற்றிவிட்டு, குழந்தைகளுக்காகத் தன்னையே ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக்கொண்ட அவிலா டீச்சரின் அற்புதம் நிறைந்த தருணங்களை, சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஜான் சுந்தர்.

இந்நூல் வெறும் வகுப்பறை அனுபவங்களின் பதிவோ அல்லது ஒரு கல்வியாளரின் ஆவணக் குறிப்போ அல்ல; மொழியாலும், மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிச் செறிவாலும் தேர்ந்த கலைவடிவமாக, நிற்கிறது. அவிலா டீச்சர் தான் சந்தித்த குழந்தைகளை மேலோட்டமான மாணவர்களாகப் பார்க்காமல், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் போய் அமர்ந்துகொண்ட ஒரு தேவதையாக ஒவ்வொரு பக்கமும் உருப்பெறுகிறார்.குழந்தைகளின் உலகம் நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பது போல வெறும் அறியாமையாலும் விளையாட்டாலும் மட்டுமே நிரம்பியது அன்று. அதில் நாம் அறியாத பேரொளியும், வெளிப்படுத்த முடியாத அடர்ந்த துயரங்களும், பேரன்பும் ஒருசேர உறைந்திருக்கின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற செயற்கையான வகைப்பாடுகளை எல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் சகலப் பொருட்களுக்குள்ளும் உயிரையும் வலியையும் உணர்வையும் தரிசிக்கும் அபாரமான பேரன்பு குழந்தைகளுடையது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொம்மைகளுக்கும், மரங்களுக்கும், பொருட்களுக்கும் உயிர் இருப்பதாகவே நம்புகிறார்கள். இது வெறும் அறியாமை அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றோடும் தம்மை இணைஒரு குழந்தை  சக வகுப்பு குழந்தைகள்   எதுகேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான்.  கண்டித்துப் பார்த்துவிட்டு  எல்லா டீச்சர்களும் இது தேறாது என்று நகர்ந்துவிட்டனர் அவிலா   டீச்சர் அப்படி நகர்ந்துபோய்விடவில்லை  எப்படியாவது அவனை  மாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பு தோன்றுகிறது 


ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த அவிலா டீச்சர் 


ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று அந்தக்குழந்தையின் நோட்டைப்பார்த்துக்கேட்கிறார்.


வெங்காயம் ....என்கிறது குழந்தை .


’ஏன் பட்டனை போடலை’ என்று அவிலா டீச்சர் கேட்கிறார். 


வெங்காயம் ....


நல்லப்படிக்கனும் இப்படி அசமந்தமா இருக்கக்கூடாது  என்று ஆலோசனை சொல்லி முடிப்பதற்க்குள்... 


 வெங்காயம்  என்கிறது அக்குழந்தை .


வெங்காயம் என்பது வசைசொல் அல்ல. ஆனால் அந்தக்குழந்தை அப்படி எல்லாவற்றிருக்கும்  அதை ஒரு வசைச்சொல்லாகவே பயன்படுத்துகிறது என்பதால் அவிலா டீச்சர் யோசிக்கிறார். ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார் 


அடுத்த நாள் வகுப்பு தொடங்குகிறது.


இரட்டை வரி நோட்  ஏன் எழுதலை?


’வெங்காயம்’ என்கிறது அந்தக்குழந்தை.


கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து  ’கத்தரிக்காய்’ என்கிறது


 இரண்டாம் பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது. 


முதல் பெஞ்சிலிருந்து எழுந்து இன்னொரு  குழந்தை ’தக்காளி’ என்கிறது.


குழந்தை எல்லா காய்கறிகளையும் திரும்பித்திரும்பி பார்க்கிறது. 


ஏன்  சூவை சரியாகப்போடலை ?


வெங்காயம் என்கிறது குழந்தை .                        மறுபடியும் மூன்றாம் பெஞ்சில்   பீட்ரூட் முளைக்கிறது .  ஏழாம் பெஞ்சில் முட்டைக்கோஸ் முளைக்கிறது.  நான்காம் பெஞ்சிலிருந்து  கேரட் விளைகிறது.  வகுப்பறையே காய்கறித்தோட்டமாகிப்போகிறது .மூன்று நாட்கள் இப்படி நடந்தபின் அந்தக்குழந்தை வெங்காயத்தை கைவிட்டுவிடுகிறது.

அவிலா டீச்சர் அதை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த குழந்தைக்கு தாவிவிடுகிறார்.  ஒருவருட கால சித்திரவதைக்கு  சட்டென அவிலா டீச்சரால் எப்படி தீர்வு தரமுடிகிறது என்கிற யோசனையில் தலைமை ஆசிரியர் மோவாயை சொறியத் தொடங்குகிறார்.

இப்படி பல்வேறு ஆசிரிய அணுகுமுறைகளை  குறுமக்கள் கொட்டாரம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் வெறும் அறிவைப் பகிரும் அதிகாரம் பெற்ற நபர் அல்ல; அவர் குழந்தையின் உணர்ச்சி மேலாண்மையைத் தீர்மானிக்கும் ‘பாதுகாப்பான புகலிடம்’ . ஆசிரியர் தனது சொந்தக் கவலைகள், சமூக அழுத்தம் மற்றும் அதிகார மனப்பான்மை போன்ற ‘ஆசிரிய உளவியல் சிக்கல்களைக்’ கடந்து, குழந்தையின் உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கும்போதே உண்மையான கற்பித்தல் நிகழ்கிறது.

இப்படி தன் அதிகாரப் படிநிலையைக் கழற்றிவிட்டு, குழந்தைகளுக்காகத் தன்னையே ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக்கொண்ட அவிலா டீச்சரின் அற்புதம் நிறைந்த தருணங்களை, சுவராசியமாக பதிவு செய்திருக்கிறார் ஜான் சுந்தர்.





இந்நூல் வெறும் வகுப்பறை அனுபவங்களின் பதிவோ அல்லது ஒரு கல்வியாளரின் ஆவணக் குறிப்போ அல்ல; மொழியாலும், மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிச் செறிவாலும் தேர்ந்த கலைவடிவமாக, நிற்கிறது. அவிலா டீச்சர் தான் சந்தித்த குழந்தைகளை மேலோட்டமான மாணவர்களாகப் பார்க்காமல், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் போய் அமர்ந்துகொண்ட ஒரு தேவதையாக ஒவ்வொரு பக்கமும் உருப்பெறுகிறார்.

குழந்தைகளின் உலகம் நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பது போல வெறும் அறியாமையாலும் விளையாட்டாலும் மட்டுமே நிரம்பியது அன்று. அதில் நாம் அறியாத பேரொளியும், வெளிப்படுத்த முடியாத அடர்ந்த துயரங்களும், பேரன்பும் ஒருசேர உறைந்திருக்கின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற செயற்கையான வகைப்பாடுகளை எல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் சகலப் பொருட்களுக்குள்ளும் உயிரையும் வலியையும் உணர்வையும் தரிசிக்கும் அபாரமான பேரன்பு குழந்தைகளுடையது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொம்மைகளுக்கும், மரங்களுக்கும், பொருட்களுக்கும் உயிர் இருப்பதாகவே நம்புகிறார்கள். இது வெறும் அறியாமை அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றோடும் தம்மை இணைத்துப் பார்க்கும் தூய அன்பின் வெளிப்பாடு என்பார் சுவிஸ்சை சேர்ந்த உளவியலாளர் ஜான் பியாஜே .

குழந்தைகளின் இந்த நுட்பமான அக உலகத்தை ஒரு சாதாரணப் பயிற்சிப் பட்டறையாலோ, வெறும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் எந்திரத்தனமான கற்பித்தலாலோ புரிந்துகொள்ள முடியாது. அதற்கு , பெரியவர்கள் தங்கள் அகந்தையைக் கழற்றி வைத்துவிட்டு, அவர்களின் உலகத்திற்குள் இறங்கிச் செல்ல வேண்டும்; நமக்குள்ளே தேங்கியிருக்கும் 'பெரிய மனிதத்தன'த்தை அகற்றித் தூய்மையடைய வேண்டும்.

குழந்தைகளிடம் பணியாற்றுபவர்கள், அவர்களின் சிக்கலான அக உலகத்தைப் புரிந்துகொள்ளத் திணறும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் என எல்லோருக்குமான அழுத்தமான உளவியல் திறவுகோல்களை இந்நூல் தன்னகத்தே வைத்திருக்கிறது.

குழந்தைகளின் அக உலகின் ஆச்சரியங்களை தரிசிப்பதற்கான வாய்ப்பைத் தரும் குறுமக்கள் கொட்டாரம்,குழந்தை, பெற்றோர் மூவருக்கிடையே ஒரு பாலத்தைக்கட்டும் முயற்சியாகவும் இலக்கியமாகவும் நம்மை வசீகரிக்கிறது.




#அன்புள்ளஜான்சுந்தர்

 

 


🍀


Thomas Aquinas

02. 04. 2018


எங்கீப்பா  இருந்தெ ஜானு இத்னெ நாளா. நகலிசை கலைஞனுக்கப்புரம்  இப்பதான்  மார்ச் காலச்சுவடுல  பாக்கறன். நெறயா எழுதுப்பா.


JohnSundar

02. 04. 2018

நல்லதுங்க... நன்றி!


🍀


Thomas Aquinas

12. 01. 2019


நேரத்திலேயே படிச்சுடேன். உடனே எழுத முடியலை. குஷ்டநோயாளி கைல பஞ்சு, செல்லோ டேப்பிலிருந்து வரும் சத்தம், புனித செசிலியம்மாள் reference இதெல்லாம்   ச்சே something unique, level with life.


@Kalachuvadu பூனை, பியானோ, பிரிட்டோ Short story 


Wishes.

Happy new year.


JohnSundar

12. 01. 2019


ரொம்ப சந்தோஷம். 

ரொம்ப சந்தோஷம். உற்சாகப்படுத்தியமைக்கு நன்றி!


🍀


Thomas Aquinas

28. 06. 2019


தூளிக்குழந்தை ஒண்ணுக்கு போனது மாதிரி கீழே ஒரு நீர் கோலம்,

பொரி வறுத்து வீடே மங்கலமா

மணக்க,


@Vikatan கிக்கி Short story 


சூப்பர் சுந்தர்.......


JohnSundar

28. 06. 2019

ரொம்ப நன்றிங்க.


🍀


Thomas Aquinas

15.11.2019


Toy maker, music teacher, origami trainer, story teller......why story writer is left out?.


@The Hindu article


Good job. Kudos.


JohnSundar

15.11.2019


.....................


🍀


JohnSundar

06.06.2024


அன்புள்ள தாமஸ்!


உங்களது நிஜப்பேர் என்னவென்று தெரியாது. என் நண்பர்களில் யாரோ ஒருவர் என்னை தொடர்ந்து உற்சாகப்படுத்திக் கொண்டிருக்கிறார், இது ஒரு விளையாட்டு என்று நினைத்திருந்தேன்.  அகழ் மின்னிதழில் ஒரு கதை எழுதி இருக்கிறேன். வழக்கம்போல உங்களிடம் இருந்து மின்னஞ்சல் வரும் என்று காத்திருந்தேன். காத்திருக்கிறேன். 


🍀


JohnSundar 

24.01.25


அன்புள்ள தாமஸ்!

தொற்று நோய்க்கால அடைவு முடிந்த பிறகு உங்களிடமிருந்து மின்னஞ்சல் எதுவுமில்லை....தாமஸ்.... எங்கே  இருக்கிறீர்கள்? இருக்கிறீர்கள் தானே?


🍀






கனவில் வந்த இரவு



🍀

படுக்கையை விட்டு எழுந்தவுடன் 
இரவில் வந்த கனவை 
தந்தையிடம் விவரிக்கிறாள் மகள் மதிப்பெண் சான்றிதழை வாங்க 
நீயும் நானும் பள்ளிக்குப் போனோமா உன்னை மரத்தடியில் 
காத்திருக்கச் சொல்லிவிட்டு 
நான் மட்டும் உள்ளே போனேனா மதிப்பெண்களைப் பார்த்துவிட்டு 
வெளியே போகக் கூடாது என்று 
ஆசிரியர் சொன்னாரா 
அப்போது பழுப்பில் ஒன்றும் 
கருப்பு வெள்ளையில் ஒன்றுமாக 
இரண்டு நாய்க் குட்டிகள் வந்தனவா அதிலொன்று பூனையாக மாறிவிட்டது. அந்தப் பூனை தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்துவிட்டதா 
காப்பாற்றி எடுத்துவந்து துவட்டினால் 
அது அப்பாவாக மாறிவிட்டது. 
மரத்தடியில் காத்திருக்கும் 
தன் கதி என்னவென்று 
குழம்பிய தந்தையிடத்தில் 
நான்தான் அதற்குள் விழித்துக்கொண்டேனே 
நீ கவலைப்படாமல் 
தேநீரை அருந்து என்கிறாள்.
தகப்பனின் 
தேநீர்க் குவளைக்குள்ளிருந்து 
தலை துவட்டியபடியே 
வெளியே வந்த ஆசிரியர் 
பூனைக்கு அடியில் 
ஒரு மரம் காத்திருக்கிறதே 
அது உங்களுடையதா என்று கேட்டார். அப்போது பூனையைப் போல அசையாமலிருக்கத்தான் 
நினைத்தார் தகப்பன் 
ஆனால் அதற்குள் 
மரத்தின் வால் 
அசைந்ததைக் கவனித்துவிட்டார் ஆசிரியர். அவரிடமிருந்து தப்புவதற்கு 
மகளைத் தேடின நாய்க்குட்டிகள் 
அவளோ நல்ல உறக்கத்திலிருக்கிறாள். இனிமேற்கொண்டு 
இரவில் கனவு வராமலிருக்க 
கனவில் ஒரு இரவு வருமல்லவா 
அதற்குள் நுழைந்து 
உறங்கிவிட வேண்டும் என்று 
முடிவு செய்தது மதிப்பெண் சான்றிதழ்.

🍀



அரும்பு இதழ்

துடிமேளக்காரன்
தொகுப்பு 



 

பிங்கியின் பயணம்


2015 முதல் கோவை பூ.சா.கோ  கலை அறிவியல் கல்லூரியின் வகுப்பறைகளில் உலவி வரும் பிங்கி, மகாராஷ்டிர மாநிலத்திலும் காணப்படுகிறது.






 

Wednesday, 6 November 2024

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் அலைபேசியில் கூப்பிட்டார். பெருமதிப்பிற்குரிய கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் 'மத்தகம்' இணையத் தொடரில் இடம்பெற்ற 'கண்ணே என் கீரைத்தண்டே' தாலாட்டுப்பாடலை கேட்டதாகவும். 'பாடல்வரிகளை கவனித்தீர்களா?' என்று செல்வேந்திரனுக்கு அனுப்பிக் கேட்டதாகவும், 'இஞ்சி இடுப்பழகி'யைச் சொல்லி நாட்டார் பாடல்கள் குறித்துப் பேசியதாகவும், அதற்கு செல்வேந்திரன், 'அவர் கோவையைச் சேர்ந்த நண்பர்தான், RKFI - 54 வது தயாரிப்புக்காக நமது அலுவலகத்தில் இருந்த குழுவில் அவரும் இருந்தார், உங்களையும்கூட சந்தித்துப் பேசினார்கள்' என்று நினைவுறுத்திச் சொல்ல அதற்கு அவர் 'இப்படித்தான் ப.சிங்காரம் சந்திப்பு நடந்தது' என்று சொல்லி, நேரில் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னதாகச் சொன்னார். சென்னை வந்த பிறகு சொல்லுங்கள் என்றார். இளவரசு அண்ணன் வீட்டுத் திருமணத்திற்கு மீண்டும் சென்னை போனபோது சொன்னேன். அவர் நேர நெருக்கடியில் இருந்ததை செல்வா சொன்னார். அதன்பிறகு தொந்தரவு செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அது உறுதியாக நடக்கும் என்று ஆழ்மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை. நண்பருக்கு நினைவுறுத்துவதை விட்டுவிட்டேன். ஏனெனில், முதன்முதலாக திரைத்துறையில் எழுதியதற்கான காசோலையை கலைஞானியாரின் அலுவலகத்தில் இருந்து மரியாதைக்குரிய சகோதரர் திரு.மகேந்திரன் அவர்களின் கரங்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டேன். கடந்த 2022 வருடம், இதே நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி என் வாழ்வில் மிக முக்கியமான நாள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வழங்கும் திரைக்கதையின் கருத்துருவாக்கம் குறித்த தகவல் பரிமாற்றம். கலைஞானி கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து, இயக்குனர் பிரசாத், எழுத்தாளர் ஜேபி சாணக்யா, லாவண்யா ஆகியோர் பேசினோம். அன்புக்குரிய நண்பர் டிஸ்னி அவர

20 நிமிடங்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த சந்திப்பு எதிர்பாராத சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்தது. உற்சாகமான பேச்சு. ஏராளமான தகவல்கள். எத்தனை திறப்புகள்! கலைஞர்களின் தலைவன்! என் புதிய மகிழ்ச்சியும் அதுதான். இத்தனைக்கும் என் பாடல் திரைப்படப்பாடல் கூட அல்ல.. இணையத் தொடரில் இடம்பெற்ற ஒரு நிமிடப் பாடல். இசைக்கோர்ப்பு இல்லாத கச்சாவான அந்த வரிகள் இந்தியக் கலையுலகின் உச்சக்கலைஞரின் கவனத்தைப் பெற்றது என்கிற தகவல் மட்டுமே போதாதா எனக்கு? இந்த மனிதர் எப்படி அவருடைய உலகத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கோவை சிறைச்சாலைக்குள் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். சின்னச்சின்ன வழக்குகளில் உள்ளே வரும் பிக்பாக்கெட் ஆட்கள் பெரிய ரவுடிகளை கடக்கும் போது உடலை ரொம்பவும் கூழைக் கும்பிடு போட்டு குறுக்காமல் அதேசமயம் புறங்கையைத் திருப்பி உள்ளங்கையைக் காட்டி

வெகுமரியாதையாக ஒரு வணக்கம் வைப்பார்கள். எங்கள் சண்டப்பிரசண்டனுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை அப்படியே சொல்ல விரும்புகிறேன்.


'ராஜூ.....செரீங்....ராஜூ!'



Saturday, 14 September 2024

ரமணர்


என் அறையில் 

நான் மட்டும் வசித்து வந்தேன்

நான் என்னோடு  

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

ரமணரின் படம் ஒன்று

எனக்குப் பரிசாகக் கிடைத்தது 

என் அறையில்

நானும் ரமணரும் வாழ்ந்து வந்தோம்

நான் ரமணருடன்

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

சில நாட்களுக்குப்பிறகு

என் அறையிலிருந்து 

நான் வெளியேற வேண்டும் 

என்று ரமணர் விரும்பினார்

அது என் அறை என்பதால் 

நான் வெளியேற மறுத்தேன்

எனவே 

ரமணர் வெளியேறினார்

என் அறையில் 

ரமணரின் படங்களுடன் 

நான் மட்டும் வாழ்ந்து வருகிறேன்.

#ஜான்சுந்தர்

Wednesday, 4 September 2024

விடுதிமனிதன்

விடுதியிலிருந்து 

விடுதிக்கு மாறி

விடுதிகளிலேயே 

வாழ்ந்து வந்த

விடுதி மனிதனின் பயணம்

உள்ளூர் விடுதியில் 

துவங்கும் 

வழியூர் விடுதியில் 

தூங்கும் 

விடுதிக்கும் விடுதிக்கும் 

இடையில் கிடந்துருளும் 

அவனது நாட்கள் 

இப்படியே

சன்னலில் இருண்டு 

கதவுகளில் விடிய

விடுதி மனிதன் 

விடுதிகள் அலுத்துப்போய்

வீடு தேடிப்போனான்.

வீட்டை வைத்திருந்தோர்

சேர்ந்து வசிக்க 

பெண் வேண்டும் என்றார்கள்.

பெண்ணை வளர்த்து வந்தோர் 

சேர்ந்து வசிக்க 

வீடு வேண்டும் என்றார்கள்.

விடுதியறைகளே 

வாழ்வதற்கும் 

தேவைப்பட்டால் 

சாவதற்கும் கூட

அனுமதிக்கின்றன 

என்கிறான் விடுதி மனிதன்.

மேலுமவன் 

விடுதியில் பிறந்தவன் 

விடுதியில் தானே 

இறக்க வேண்டும் 

என்று வினவுகிறான்

புகைப்படங்களில் 

விடுதிப் பணியாளர்கள் 

அவனது உறவின் முறையினராக

முறுவலிக்கின்றனர்.


#ஜான்சுந்தர்

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...