Friday, 7 August 2026

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

 



ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் பார்த்துவிட்டு எல்லா டீச்சர்களும் இது தேறாது என்று நகர்ந்துவிட்டனர் அவிலா டீச்சர் அப்படி நகர்ந்துபோய்விடவில்லை எப்படியாவது அவனை மாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பு தோன்றுகிறது 

ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த அவிலா டீச்சர் 

ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று அந்தக்குழந்தையின் நோட்டைப்பார்த்துக்கேட்கிறார்.

வெங்காயம் ....என்கிறது குழந்தை .

’ஏன் பட்டனை போடலை’ என்று அவிலா டீச்சர் கேட்கிறார். 

வெங்காயம் ....

நல்லாப்படிக்கனும் இப்படி அசமந்தமா இருக்கக்கூடாது என்று ஆலோசனை சொல்லி முடிப்பதற்க்குள்... 

வெங்காயம் என்கிறது அக்குழந்தை .

வெங்காயம் என்பது வசைசொல் அல்ல. ஆனால் அந்தக்குழந்தை அப்படி எல்லாவற்றிருக்கும் அதை ஒரு வசைச்சொல்லாகவே பயன்படுத்துகிறது என்பதால் அவிலா டீச்சர் யோசிக்கிறார். ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார் 

அடுத்த நாள் வகுப்பு தொடங்குகிறது.

இரட்டை வரி நோட் ஏன் எழுதலை?

’வெங்காயம்’ என்கிறது அந்தக்குழந்தை.

கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது

இரண்டாம் பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது. 

முதல் பெஞ்சிலிருந்து எழுந்து இன்னொரு குழந்தை ’தக்காளி’ என்கிறது.

குழந்தை எல்லா காய்கறிகளையும் திரும்பித்திரும்பி பார்க்கிறது. 

ஏன் ஷூ- வை சரியாகப்போடலை ?

வெங்காயம் என்கிறது குழந்தை . மறுபடியும் மூன்றாம் பெஞ்சில் பீட்ரூட் முளைக்கிறது . ஏழாம் பெஞ்சில் முட்டைக்கோஸ் முளைக்கிறது. நான்காம் பெஞ்சிலிருந்து கேரட் விளைகிறது. வகுப்பறையே காய்கறித்தோட்டமாகிப்போகிறது .மூன்று நாட்கள் இப்படி நடந்தபின் அந்தக்குழந்தை வெங்காயத்தை கைவிட்டுவிடுகிறது.


அவிலா டீச்சர் அதை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த குழந்தைக்கு தாவி விடுகிறார். ஒருவருட கால சித்திரவதைக்கு சட்டென அவிலா டீச்சரால் எப்படி தீர்வு தரமுடிகிறது என்கிற யோசனையில் தலைமை ஆசிரியர் மோவாயை சொறியத்தொடங்குகிறார்.

இப்படி பல்வேறு ஆசிரிய அணுகுமுறைகளை குறுமக்கள் கொட்டாரம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் வெறும் அறிவைப் பகிரும் அதிகாரம் பெற்ற நபர் அல்ல; அவர் குழந்தையின் உணர்ச்சி மேலாண்மையைத் தீர்மானிக்கும் ‘பாதுகாப்பான புகலிடம்’ . ஆசிரியர் தனது சொந்தக் கவலைகள், சமூக அழுத்தம் மற்றும் அதிகார மனப்பான்மை போன்ற ‘ஆசிரிய உளவியல் சிக்கல்களைக்’ கடந்து, குழந்தையின் உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கும்போதே உண்மையான கற்பித்தல் நிகழ்கிறது.இப்படி தன் அதிகாரப் படிநிலையைக் கழற்றிவிட்டு, குழந்தைகளுக்காகத் தன்னையே ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக்கொண்ட அவிலா டீச்சரின் அற்புதம் நிறைந்த தருணங்களை, சுவாரசியமாக பதிவு செய்திருக்கிறார் ஜான் சுந்தர்.

இந்நூல் வெறும் வகுப்பறை அனுபவங்களின் பதிவோ அல்லது ஒரு கல்வியாளரின் ஆவணக் குறிப்போ அல்ல; மொழியாலும், மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிச் செறிவாலும் தேர்ந்த கலைவடிவமாக, நிற்கிறது. அவிலா டீச்சர் தான் சந்தித்த குழந்தைகளை மேலோட்டமான மாணவர்களாகப் பார்க்காமல், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் போய் அமர்ந்துகொண்ட ஒரு தேவதையாக ஒவ்வொரு பக்கமும் உருப்பெறுகிறார்.குழந்தைகளின் உலகம் நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பது போல வெறும் அறியாமையாலும் விளையாட்டாலும் மட்டுமே நிரம்பியது அன்று. அதில் நாம் அறியாத பேரொளியும், வெளிப்படுத்த முடியாத அடர்ந்த துயரங்களும், பேரன்பும் ஒருசேர உறைந்திருக்கின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற செயற்கையான வகைப்பாடுகளை எல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் சகலப் பொருட்களுக்குள்ளும் உயிரையும் வலியையும் உணர்வையும் தரிசிக்கும் அபாரமான பேரன்பு குழந்தைகளுடையது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொம்மைகளுக்கும், மரங்களுக்கும், பொருட்களுக்கும் உயிர் இருப்பதாகவே நம்புகிறார்கள். இது வெறும் அறியாமை அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றோடும் தம்மை இணைஒரு குழந்தை  சக வகுப்பு குழந்தைகள்   எதுகேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான்.  கண்டித்துப் பார்த்துவிட்டு  எல்லா டீச்சர்களும் இது தேறாது என்று நகர்ந்துவிட்டனர் அவிலா   டீச்சர் அப்படி நகர்ந்துபோய்விடவில்லை  எப்படியாவது அவனை  மாற்றிவிடவேண்டுமென்ற முனைப்பு தோன்றுகிறது 


ஒரு நாள் வகுப்புக்குள் நுழைந்த அவிலா டீச்சர் 


ஏன் வீட்டுப்பாடம் எழுதவில்லை என்று அந்தக்குழந்தையின் நோட்டைப்பார்த்துக்கேட்கிறார்.


வெங்காயம் ....என்கிறது குழந்தை .


’ஏன் பட்டனை போடலை’ என்று அவிலா டீச்சர் கேட்கிறார். 


வெங்காயம் ....


நல்லப்படிக்கனும் இப்படி அசமந்தமா இருக்கக்கூடாது  என்று ஆலோசனை சொல்லி முடிப்பதற்க்குள்... 


 வெங்காயம்  என்கிறது அக்குழந்தை .


வெங்காயம் என்பது வசைசொல் அல்ல. ஆனால் அந்தக்குழந்தை அப்படி எல்லாவற்றிருக்கும்  அதை ஒரு வசைச்சொல்லாகவே பயன்படுத்துகிறது என்பதால் அவிலா டீச்சர் யோசிக்கிறார். ஒரு சதித்திட்டம் தீட்டுகிறார் 


அடுத்த நாள் வகுப்பு தொடங்குகிறது.


இரட்டை வரி நோட்  ஏன் எழுதலை?


’வெங்காயம்’ என்கிறது அந்தக்குழந்தை.


கடைசி பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து  ’கத்தரிக்காய்’ என்கிறது


 இரண்டாம் பெஞ்சிலிருந்து ஒரு குழந்தை எழுந்து ’கத்தரிக்காய்’ என்கிறது. 


முதல் பெஞ்சிலிருந்து எழுந்து இன்னொரு  குழந்தை ’தக்காளி’ என்கிறது.


குழந்தை எல்லா காய்கறிகளையும் திரும்பித்திரும்பி பார்க்கிறது. 


ஏன்  சூவை சரியாகப்போடலை ?


வெங்காயம் என்கிறது குழந்தை .                        மறுபடியும் மூன்றாம் பெஞ்சில்   பீட்ரூட் முளைக்கிறது .  ஏழாம் பெஞ்சில் முட்டைக்கோஸ் முளைக்கிறது.  நான்காம் பெஞ்சிலிருந்து  கேரட் விளைகிறது.  வகுப்பறையே காய்கறித்தோட்டமாகிப்போகிறது .மூன்று நாட்கள் இப்படி நடந்தபின் அந்தக்குழந்தை வெங்காயத்தை கைவிட்டுவிடுகிறது.

அவிலா டீச்சர் அதை பெரிய சாதனையாக எடுத்துக்கொள்ளாமல் அடுத்த குழந்தைக்கு தாவிவிடுகிறார்.  ஒருவருட கால சித்திரவதைக்கு  சட்டென அவிலா டீச்சரால் எப்படி தீர்வு தரமுடிகிறது என்கிற யோசனையில் தலைமை ஆசிரியர் மோவாயை சொறியத் தொடங்குகிறார்.

இப்படி பல்வேறு ஆசிரிய அணுகுமுறைகளை  குறுமக்கள் கொட்டாரம் நம்மோடு பகிர்ந்துகொள்கிறது.

ஒரு வகுப்பறையில் ஆசிரியர் என்பவர் வெறும் அறிவைப் பகிரும் அதிகாரம் பெற்ற நபர் அல்ல; அவர் குழந்தையின் உணர்ச்சி மேலாண்மையைத் தீர்மானிக்கும் ‘பாதுகாப்பான புகலிடம்’ . ஆசிரியர் தனது சொந்தக் கவலைகள், சமூக அழுத்தம் மற்றும் அதிகார மனப்பான்மை போன்ற ‘ஆசிரிய உளவியல் சிக்கல்களைக்’ கடந்து, குழந்தையின் உணர்ச்சி நிலையில் நின்று யோசிக்கும்போதே உண்மையான கற்பித்தல் நிகழ்கிறது.

இப்படி தன் அதிகாரப் படிநிலையைக் கழற்றிவிட்டு, குழந்தைகளுக்காகத் தன்னையே ஒரு பாதுகாப்பான புகலிடமாக மாற்றிக்கொண்ட அவிலா டீச்சரின் அற்புதம் நிறைந்த தருணங்களை, சுவராசியமாக பதிவு செய்திருக்கிறார் ஜான் சுந்தர்.





இந்நூல் வெறும் வகுப்பறை அனுபவங்களின் பதிவோ அல்லது ஒரு கல்வியாளரின் ஆவணக் குறிப்போ அல்ல; மொழியாலும், மனித ஆன்மாவைத் தொடும் உணர்ச்சிச் செறிவாலும் தேர்ந்த கலைவடிவமாக, நிற்கிறது. அவிலா டீச்சர் தான் சந்தித்த குழந்தைகளை மேலோட்டமான மாணவர்களாகப் பார்க்காமல், அவர்களின் ஆன்மாவின் ஆழத்தில் போய் அமர்ந்துகொண்ட ஒரு தேவதையாக ஒவ்வொரு பக்கமும் உருப்பெறுகிறார்.

குழந்தைகளின் உலகம் நாம் சாதாரணமாக நினைத்துக்கொண்டிருப்பது போல வெறும் அறியாமையாலும் விளையாட்டாலும் மட்டுமே நிரம்பியது அன்று. அதில் நாம் அறியாத பேரொளியும், வெளிப்படுத்த முடியாத அடர்ந்த துயரங்களும், பேரன்பும் ஒருசேர உறைந்திருக்கின்றன. உயிருள்ளவை, உயிரற்றவை என்ற செயற்கையான வகைப்பாடுகளை எல்லாம் தாண்டி, பிரபஞ்சத்தின் சகலப் பொருட்களுக்குள்ளும் உயிரையும் வலியையும் உணர்வையும் தரிசிக்கும் அபாரமான பேரன்பு குழந்தைகளுடையது. குழந்தைகள் தங்களைச் சுற்றியுள்ள பொம்மைகளுக்கும், மரங்களுக்கும், பொருட்களுக்கும் உயிர் இருப்பதாகவே நம்புகிறார்கள். இது வெறும் அறியாமை அல்ல, பிரபஞ்சத்தின் எல்லாவற்றோடும் தம்மை இணைத்துப் பார்க்கும் தூய அன்பின் வெளிப்பாடு என்பார் சுவிஸ்சை சேர்ந்த உளவியலாளர் ஜான் பியாஜே .

குழந்தைகளின் இந்த நுட்பமான அக உலகத்தை ஒரு சாதாரணப் பயிற்சிப் பட்டறையாலோ, வெறும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் எந்திரத்தனமான கற்பித்தலாலோ புரிந்துகொள்ள முடியாது. அதற்கு , பெரியவர்கள் தங்கள் அகந்தையைக் கழற்றி வைத்துவிட்டு, அவர்களின் உலகத்திற்குள் இறங்கிச் செல்ல வேண்டும்; நமக்குள்ளே தேங்கியிருக்கும் 'பெரிய மனிதத்தன'த்தை அகற்றித் தூய்மையடைய வேண்டும்.

குழந்தைகளிடம் பணியாற்றுபவர்கள், அவர்களின் சிக்கலான அக உலகத்தைப் புரிந்துகொள்ளத் திணறும் பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள் என எல்லோருக்குமான அழுத்தமான உளவியல் திறவுகோல்களை இந்நூல் தன்னகத்தே வைத்திருக்கிறது.

குழந்தைகளின் அக உலகின் ஆச்சரியங்களை தரிசிப்பதற்கான வாய்ப்பைத் தரும் குறுமக்கள் கொட்டாரம்,குழந்தை, பெற்றோர் மூவருக்கிடையே ஒரு பாலத்தைக்கட்டும் முயற்சியாகவும் இலக்கியமாகவும் நம்மை வசீகரிக்கிறது.




No comments:

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...