Wednesday, 6 November 2024

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் அலைபேசியில் கூப்பிட்டார். பெருமதிப்பிற்குரிய கலைஞானி கமல்ஹாசன் அவர்கள் 'மத்தகம்' இணையத் தொடரில் இடம்பெற்ற 'கண்ணே என் கீரைத்தண்டே' தாலாட்டுப்பாடலை கேட்டதாகவும். 'பாடல்வரிகளை கவனித்தீர்களா?' என்று செல்வேந்திரனுக்கு அனுப்பிக் கேட்டதாகவும், 'இஞ்சி இடுப்பழகி'யைச் சொல்லி நாட்டார் பாடல்கள் குறித்துப் பேசியதாகவும், அதற்கு செல்வேந்திரன், 'அவர் கோவையைச் சேர்ந்த நண்பர்தான், RKFI - 54 வது தயாரிப்புக்காக நமது அலுவலகத்தில் இருந்த குழுவில் அவரும் இருந்தார், உங்களையும்கூட சந்தித்துப் பேசினார்கள்' என்று நினைவுறுத்திச் சொல்ல அதற்கு அவர் 'இப்படித்தான் ப.சிங்காரம் சந்திப்பு நடந்தது' என்று சொல்லி, நேரில் சந்திக்க விரும்புவதாகவும் சொன்னதாகச் சொன்னார். சென்னை வந்த பிறகு சொல்லுங்கள் என்றார். இளவரசு அண்ணன் வீட்டுத் திருமணத்திற்கு மீண்டும் சென்னை போனபோது சொன்னேன். அவர் நேர நெருக்கடியில் இருந்ததை செல்வா சொன்னார். அதன்பிறகு தொந்தரவு செய்வதில் எனக்கும் உடன்பாடு இல்லை. அது உறுதியாக நடக்கும் என்று ஆழ்மனதில் ஏதோ ஒரு நம்பிக்கை. நண்பருக்கு நினைவுறுத்துவதை விட்டுவிட்டேன். ஏனெனில், முதன்முதலாக திரைத்துறையில் எழுதியதற்கான காசோலையை கலைஞானியாரின் அலுவலகத்தில் இருந்து மரியாதைக்குரிய சகோதரர் திரு.மகேந்திரன் அவர்களின் கரங்களில் இருந்துதான் பெற்றுக் கொண்டேன். கடந்த 2022 வருடம், இதே நவம்பர் மாதம் பதினைந்தாம் தேதி என் வாழ்வில் மிக முக்கியமான நாள். ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரித்து வழங்கும் திரைக்கதையின் கருத்துருவாக்கம் குறித்த தகவல் பரிமாற்றம். கலைஞானி கமல்ஹாசன் அவர்களை நேரில் சந்தித்து, இயக்குனர் பிரசாத், எழுத்தாளர் ஜேபி சாணக்யா, லாவண்யா ஆகியோர் பேசினோம். அன்புக்குரிய நண்பர் டிஸ்னி அவர

20 நிமிடங்கள் வரை இருக்கலாம் என்று குறிப்பிட்ட அந்த சந்திப்பு எதிர்பாராத சுமார் 75 நிமிடங்கள் வரை நீடித்தது. உற்சாகமான பேச்சு. ஏராளமான தகவல்கள். எத்தனை திறப்புகள்! கலைஞர்களின் தலைவன்! என் புதிய மகிழ்ச்சியும் அதுதான். இத்தனைக்கும் என் பாடல் திரைப்படப்பாடல் கூட அல்ல.. இணையத் தொடரில் இடம்பெற்ற ஒரு நிமிடப் பாடல். இசைக்கோர்ப்பு இல்லாத கச்சாவான அந்த வரிகள் இந்தியக் கலையுலகின் உச்சக்கலைஞரின் கவனத்தைப் பெற்றது என்கிற தகவல் மட்டுமே போதாதா எனக்கு? இந்த மனிதர் எப்படி அவருடைய உலகத்தை கண்காணித்துக் கொண்டிருக்கிறார் என்பதை நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கோவை சிறைச்சாலைக்குள் இசை நிகழ்ச்சிகள் நடத்தியிருக்கிறேன். சின்னச்சின்ன வழக்குகளில் உள்ளே வரும் பிக்பாக்கெட் ஆட்கள் பெரிய ரவுடிகளை கடக்கும் போது உடலை ரொம்பவும் கூழைக் கும்பிடு போட்டு குறுக்காமல் அதேசமயம் புறங்கையைத் திருப்பி உள்ளங்கையைக் காட்டி

வெகுமரியாதையாக ஒரு வணக்கம் வைப்பார்கள். எங்கள் சண்டப்பிரசண்டனுக்கு நான் பிறந்தநாள் வாழ்த்துகளை அப்படியே சொல்ல விரும்புகிறேன்.


'ராஜூ.....செரீங்....ராஜூ!'



No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...