Saturday, 14 September 2024

ரமணர்


என் அறையில் 

நான் மட்டும் வசித்து வந்தேன்

நான் என்னோடு  

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

ரமணரின் படம் ஒன்று

எனக்குப் பரிசாகக் கிடைத்தது 

என் அறையில்

நானும் ரமணரும் வாழ்ந்து வந்தோம்

நான் ரமணருடன்

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

சில நாட்களுக்குப்பிறகு

என் அறையிலிருந்து 

நான் வெளியேற வேண்டும் 

என்று ரமணர் விரும்பினார்

அது என் அறை என்பதால் 

நான் வெளியேற மறுத்தேன்

எனவே 

ரமணர் வெளியேறினார்

என் அறையில் 

ரமணரின் படங்களுடன் 

நான் மட்டும் வாழ்ந்து வருகிறேன்.

#ஜான்சுந்தர்

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...