Saturday, 5 October 2024

எவ்வளவோ பெரிய


அண்டத்தின்
எண்ணி முடியாத 
பால் வீதிகளில்
எத்தனையோ 
விண்மீன் குடும்பங்கள்
நீரும் காற்றும்
துணைக்கொரு 
நிலவுமுள்ள கோளில் 
மிதந்து அலைகிறது சிறு துரும்பு
துரும்புக்கு
துணையொரு வெள்ளி
தலையெடுக்கும் குஞ்சுகளோடு
கிரணப் பொன் வளியில் 
மிதக்கும் மீன் குடும்பம்
சுற்றித்திரியும் பால்வீதி
எல்லாம் அது போலவே
ஆனாலும் 
அண்டத்தின் கோள்களில் 
இல்லாத ஒன்று 
துரும்பின் வசமுண்டு
அது தலையில் சுமந்து அலையும்
பேரண்டத்தின் பாரமுள்ள
அதன் துயரம் 

#ஜான்சுந்தர்





அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...