என் அறையில்
நான் மட்டும் வசித்து வந்தேன்
நான் என்னோடு
என்னைக் குறித்துப் பேசி வந்தேன்
ரமணரின் படம் ஒன்று
எனக்குப் பரிசாகக் கிடைத்தது
என் அறையில்
நானும் ரமணரும் வாழ்ந்து வந்தோம்
நான் ரமணருடன்
என்னைக் குறித்துப் பேசி வந்தேன்
சில நாட்களுக்குப்பிறகு
என் அறையிலிருந்து
நான் வெளியேற வேண்டும்
என்று ரமணர் விரும்பினார்
அது என் அறை என்பதால்
நான் வெளியேற மறுத்தேன்
எனவே
ரமணர் வெளியேறினார்
என் அறையில்
ரமணரின் படங்களுடன்
நான் மட்டும் வாழ்ந்து வருகிறேன்.
#ஜான்சுந்தர்