தன்னைத்தானே
தட்டிக் கொண்டு உறங்கும்
சிறுமியைப் பார்த்து
உச்சு கொட்டுகிறார்கள்.
தலையில் இடி விழுந்த மறுநாளே
மயிரையள்ளிக் கொண்டையிட்டு
செங்கல் சுமக்கப் போனவளுக்கு
இது வியப்பில்லை
பெற்றதும் உடன்பிறந்த
மற்றதும் உதவுமென்று
தலையைச் சொறிந்து நிற்காமல்
தன்னைத்தானே
சவுக்கால் விளாசிக் கொண்டு
தட்டாமாலை சுற்றுகிற
மண்ணுருண்டையின் மகளல்லவா
#ஜான்சுந்தர்
No comments:
Post a Comment