Tuesday, 3 September 2024

மகள்

தன்னைத்தானே

தட்டிக் கொண்டு உறங்கும் 

சிறுமியைப் பார்த்து 

உச்சு கொட்டுகிறார்கள்.

தலையில் இடி விழுந்த மறுநாளே 

மயிரையள்ளிக் கொண்டையிட்டு

செங்கல் சுமக்கப் போனவளுக்கு 

இது வியப்பில்லை

பெற்றதும் உடன்பிறந்த 

மற்றதும் உதவுமென்று

தலையைச் சொறிந்து நிற்காமல் 

தன்னைத்தானே 

சவுக்கால் விளாசிக் கொண்டு

தட்டாமாலை சுற்றுகிற 

மண்ணுருண்டையின் மகளல்லவா


#ஜான்சுந்தர்

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...