Thursday, 29 August 2024

மடி

 

பொய்யாக தலையை வைத்துப் படுக்கிறாள்

குழந்தையின் மடியில் 

மெய்யாகவே அவளைத் தாலாட்டுகிறது குழந்தை

சின்னஞ்சிறு மடியில் 

அன்னையின் தலை நிரம்பி

தரையில் வழிகிறது கூந்தல்

அதை வாரி வாரி 

மடியிலிட்டுக்கொள்கிறது குழந்தை 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு

இடப்புறம் கிடந்த மீதவுடலும்

மயிரெனச் சுருண்டு மடியேறுகிறது.


#ஜான்சுந்தர்

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...