Monday, 9 September 2019

இசைஞனின் கவி அல்லது கவிஞனின் இசை

                                                                                                                                                         

*
இதுகாறும் மதுப்புட்டியை ஸோகரஸந்ததும்பும்
வயலினென்றே நினைத்திருக்க
வாய் பொருத்தி நீ சரித்த க்ஷணத்திலந்த
பியர் போத்தல்
எக்காளத்தையூதுங் கொம்பானதைப் பார்த்தேன்.
*
அடியில் கால் நுழைத்து பாதமழுத்தும்
மோகத்திற்கெதிராய்
ரகசியங்களை திறந்து காட்டி
அத்தனைப் பற்களிலும் சிரிக்கும் அவளொரு
வெட்கமில்லாப்  பியானோதான்.
*
தம்புராவின் உறுமலுக்கு
வாலைச்சுருட்டிக் கொள்கிறது
ஆன்மா.
*
கிதாரென்று
நீ நம்பிக்கொண்டிருப்பது
ஓர் அம்மணத்தை
*
உன் கையிலிருக்கும்
இந்த ஒலிவாங்கி
அரங்கம் ருசிக்கும்
ஐஸ்க்ரீமாகிவிட்டது பார்.

No comments:

குறுமக்கள் கொட்டாரம் - நூல் குறித்து ஒடியன் லட்சுமணன்

  ஒரு குழந்தை சக வகுப்பு குழந்தைகள் எது கேட்டாலும் வெங்காயம் என்கிறது. மாணவர் மட்டுமில்லை டீச்சர்களிடத்திலும் அப்படித்தான். கண்டித்துப் ...