பிள்ளைகளைக்குறித்து
அழும்போதும்
பிள்ளைகளைச்சொல்லி
சிரிக்கும்போதும்
அவளோடு அவளது
உந்திச்சுழியோ
தொந்திச்சதையோ
குலுங்கியடங்குகிறது
அம்மா
அடிவயிற்றிலிருந்து
அரற்றுகிறாள்
அடிவயிற்றிலிருந்தே
மணக்கிறாள்
இப்போதும்
அடிவயிற்று முந்திக்குள்
துயரப் பொதிகளை
மறைத்து வைத்திருக்கிறாள்.
No comments:
Post a Comment