Tuesday, 27 August 2024

உந்திச்சுழி

 பிள்ளைகளைக்குறித்து

அழும்போதும்

பிள்ளைகளைச்சொல்லி

சிரிக்கும்போதும்

அவளோடு அவளது

உந்திச்சுழியோ

தொந்திச்சதையோ

குலுங்கியடங்குகிறது

அம்மா 

அடிவயிற்றிலிருந்து 

அரற்றுகிறாள்  

அடிவயிற்றிலிருந்தே 

மணக்கிறாள்

இப்போதும் 

அடிவயிற்று முந்திக்குள்

துயரப் பொதிகளை

மறைத்து வைத்திருக்கிறாள்.

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...