Tuesday, 27 August 2024

செங்கொன்றைகள் மிதந்துவருகின்றன

 

பட்டாம்பூச்சிகள் வந்து போவதை

பீற்றிக்கொள்கிற வீடு

விருந்தாள் வராத நாட்களில் 

தன் திறப்புகளை மூடிக்கொள்கிறது 

பட்டாம்பூச்சிகள் வந்தால் 

காத்தாடியைப் போட முடியாது 

கதவைத் தட்டித்தட்டி ஓயாத 

பட்டாம்பூச்சிகள் 

தினந்தோறும் 

ஒரு விருந்தாளியைத் தூக்கிக் கொண்டு 

உள்ளே வருகின்றன.

No comments:

அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.

  ஏன் இப்படி இருக்கிறாய்?  எப்போது பார்த்தாலும்  முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு  குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது  மரக்கிளையைப் பார்...