Sunday, 12 July 2020
உங்கா மரத்தின் கனி
ஐந்து ரூபாய் கொடுத்து
கண்ணாடிக் கரைசலாய்
எச்சில்சாலைகளில்
’உங்கா’ வென குழந்தை வீறிடக்கேட்டு
இப்போது...... நிஜமாகவே
Saturday, 11 July 2020
தேடுங்கள்
சுற்றுலா வந்த
Kalimuthu Nalla Tambi
kannada version of the poem below:
ಪ್ರವಾಸ ಬಂದ ಮಕ್ಕಳ ಖುಶಿ
ದೇವಾಲಯದೊಳಗೆ ಕೇಕೆಯಾಯಿತು
ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡುತ್ತಿದ್ದವರು ಗದರಿಸಿದರು
ಆಟ ಆಡುವವರು ಹೊರಗೆ ಹೋಗಿ
ಜಪಿಸುವವರು ಮಾತ್ರ ಒಳಗಿರಬಹುದು
ಬೇಡಿಕೆಗಳು ಮುಗಿಸಿ ಎದ್ದ ಮೇಷ್ಟ್ರು
ಗೋಡೆ ನೋಡಿ ಘಾಬರಿಯಾದರು
ಮೇರಿ ಮಾತೆಯ ಕೈಯಲ್ಲಿ ಮಗನಿಲ್ಲ
ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಹೊರಹೋಗಿರಬಹುದೇ!
ತಮಿಳು ಮೂಲ : ಜಾನ್ ಸುಂದರ್
ಕನ್ನಡದಲ್ಲಿ : ನಲ್ಲತಂಬಿ
ದೇವಾಲಯದೊಳಗೆ ಕೇಕೆಯಾಯಿತು
ಪ್ರಾರ್ಥನೆ ಮಾಡುತ್ತಿದ್ದವರು ಗದರಿಸಿದರು
ಆಟ ಆಡುವವರು ಹೊರಗೆ ಹೋಗಿ
ಜಪಿಸುವವರು ಮಾತ್ರ ಒಳಗಿರಬಹುದು
ಬೇಡಿಕೆಗಳು ಮುಗಿಸಿ ಎದ್ದ ಮೇಷ್ಟ್ರು
ಗೋಡೆ ನೋಡಿ ಘಾಬರಿಯಾದರು
ಮೇರಿ ಮಾತೆಯ ಕೈಯಲ್ಲಿ ಮಗನಿಲ್ಲ
ಮಕ್ಕಳೊಂದಿಗೆ ಹೊರಹೋಗಿರಬಹುದೇ!
ತಮಿಳು ಮೂಲ : ಜಾನ್ ಸುಂದರ್
ಕನ್ನಡದಲ್ಲಿ : ನಲ್ಲತಂಬಿ
ஜென் கூர்மம்
ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்த முயலுக்கு
ஆமையின் வேகத்தை நினைத்ததும்
பொத்துக் கொண்டது சிரிப்பு
பகடியைப் பகிர்ந்து கொள்ள
நண்பர்களும் பக்கத்தில இல்லை
தனிமை துரத்த
முயல் ஓடுகிறது
ஆமையை நோக்கி
சினேகத்தைப் பாடி
நடந்தன இரண்டும்
ஆமை கழற்றிக் கொடுத்த ஓட்டை
சுமந்து பார்த்த முயலுக்கு
பொத்துக் கொண்டது அழுகை
ஆமையின் பாதச்சுவடுகளை
பணிந்து தொடர்கிறது முயல்.
Monday, 6 July 2020
அழ. வள்ளியப்பா - அரைமூடி அஸ்கா
அம்மா கடைக்குப் போய்வரச் சொன்னதும், காசை வாங்கிப் பையில் போட்டுக் கொண்டு கிளம்பினான். வெகு தூரத்திலிருக்கும் முசுலியார் கடைக்கு நடந்தே போவதைக் காட்டிலும் குதிரையோட்டிக்கொண்டு போவதுதான் சரி. சுவரோரம் சாய்ந்து நின்று கொண்டிருந்த குதிரையைத் தூக்கி தோளில் மாட்டிக் கொண்டு குதிரையை பறக்கவைக்கும் கைக்கோலையும் எடுத்துக் கொண்டு வாசலுக்கு வந்தான். ’ஹா! என் லட்சியப் பயணத்தை ஒரு காட்டாறு குறுக்கிடுவதா?’ பின்பக்கம் திரும்பாமலே பின்னோக்கி நடந்தான். புலி பதுங்குவது எதற்கு? ஓடி வந்து ஒரே பாய்ச்சல்! நதியைக் கடந்து விட்டான். பாய்ந்து கடக்கிற போது தோளில் இருந்த குதிரை பயத்தில் அவனை இறுகப்பற்றிக் கொண்டது. அப்படிச் செய்ததால் அது தப்பிப் பிழைத்தது.பிடித்த கையிலேயே கைக்கோலையும் பிடித்திருந்ததால் அதுதவறி நதிக்குள் விழுந்திருக்கிறது. நதியோரத்திலேயே ஓடினான். எங்கேயோ இருக்கிற கருங்கடலைத் தேடிப் போகும் இருள் நதி. கைக்கோல் மிதந்தபடியே சுழலுகிறது. அப்படியே நதியோட்டத்தில் பயணிக்கிறது. கையை நீட்டி எடுத்து விடலாமா?
”டேய்….தம்பி! சாக்கடைக்குள்ள விழுந்துடப்போறே!”
யாரோ வழிப்போக்கன்! வழிப்போக்கன் கண்டதை அம்மாவிடம் சொல்லிவிட்டால்? அய்யய்யோ! போகட்டும் . சாகசத்தின் போது இப்படி நமது பக்கமும் இழப்புகள் ஏற்படுவது இயல்புதான். நல்ல பிள்ளையாக திரும்பி நடந்து ஆமணக்குச்செடியின் அடர்ந்த கிளைகளில் ஒன்றை முறித்து கைக்கோலாக்கிக் கொண்டான். குதிரையைத் தோளிலிருந்து இறக்கி வைத்து கோலால் ஒரு தட்டு”ஹூய்! டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி”குதிரையிடம் இல்லாத குளம்புகளுக்கு குரல் கொடுத்த வண்ணம் ஓடுகிறான். ஒத்தை டயராக இருந்தால் லொடக்கு லொடக்கு என்று நொண்டி நொண்டித்தான் ஓடும். ஓட்டை இல்லாத டயரை சைக்கிள் கடைத் தாத்தா சும்மா கொடுப்பாரா? ஓட்டை இருக்கிற டயரையே இரண்டாக வாங்கி வந்து ஒன்றுக்குள் ஒன்றைத் திணித்து நல்ல கனமான, மதர்த்த குதிரையை தயார் செய்திருக்கிறான்.எல்லாம் சரி….அம்மா வாங்கி வரச் சொன்னதென்ன? அடப்பாவமே மறந்து விட்டதே? குதிரை நிற்காமல் ஓடுகிறது.
டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி
குதிரைப் பாடல்களில் நினைவில் இருந்த ஒன்றின் சரணத்து வரிகள் தானாக மாறின,
“ அம்மா எதையோ வாங்கி வரச்சொன்னாள்
அதற்குள் நான் அதை மறந்தேனே…..அஅ ஆ…ஆ….
அம்மா எதையோ வாங்கி வரச்சொன்னாள்
அதற்குள் நான் அதை மறந்தேனே…..
மறுபடி போனால் திரும்பவும் கேட்டால்
உதை விழும் அய்யோ.. நான் மாட்டேன்…… ”
பல்லவி தானாக சேர்ந்து கொண்டது
”அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா…”
எல்லாம் இந்தக் கைக்கோலால் வந்த வினை.அது மட்டும் விழாமல் இருந்திருந்தால் வாங்க வேண்டிய சாமான்களையே பாட்டாக படித்துக் கொண்டு வந்திருப்பான்… வழக்கமாக அதுதான் நடக்கும். இன்றைக்கு மறந்து போனானே?
“ஹேய்… குதிரையை எடுக்கும் போது என்னவோ முணுமுணுத்தேனே?”
”அரை மூடித் தேங்காய்…. கால் கிலோ அஸ்கா…..”
வந்துவிட்டது… நினைவுக்கு வந்துவிட்டது. நினைவு திரும்பிய மகிழ்வில்… மளிகைக் கடைக்கார முசுலியார் உடைக்கப் போகிற தேங்காயை… அதிலிருந்து வழியும் சர்க்கரைத்தண்ணீரை…. இவன் அதைக் குடிக்க வாய் பிளந்து அண்ணாந்து நிற்பதை…. முசுலியார் தனது ’கீத்து’ போடும் கத்தியும் சுத்தியலும் ஒன்றேயான ஆயுதத்தால் தேங்காயின் விரிசலை விரிப்பதை….. ஓட்டின் உள்ளிருந்து தேங்காயே அவனைப் பார்த்து சிரிப்பதை…. கழுத்து நெஞ்சு வயிறு எல்லாம் நனைய வழிந்தோடுகிற இனிப்பை…. சகலத்தையும் நினைத்து சப்புக் கொட்டிக் கொண்டான்…. கடையும் வந்து சேர்ந்தது. மறந்து போய் நினைவுக்கு வந்தது, இவ்வளவு நேரமும் சொல்லிக் கொண்டது,பாடிக் கொண்டும் வந்தது. அதை முசுலியாரிடம் சொல்லும் போது ஒரு நொடி நிலைதடுமாறி தலையும் வாலும் மாறி இருந்தது.
”கால்கிலோ தேங்காய், அரை மூடி அஸ்கா”
ஆனால் முசுலியார் அந்த விடுகதையை லகுவாக அவிழ்த்தார்
”அரை மூடித் தேங்காயா?”
முழுத்தேங்காயை எடுத்து குலுக்கியவாறே இவனைப் பார்த்தார்
” குடிக்கிறியா?....ஆ காட்டு”
வண்டியைத் திருப்பிக் கொண்டு வரும் வழியில் மீண்டும் அதே பாட்டு வரிகள் புதிது…
”அரை மூடித் தேங்காய் கால் கிலோ அஸ்கா…..”
அவரைக்காய் அதுவும் வேணும்
முழுசாத் தேங்காய், முசுலியார் உடைத்தால்,
தேங்காய் தண்ணியை நான் குடிப்பேன் ”
”ஹேய்…. அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா”
”டேய்….தம்பி! சாக்கடைக்குள்ள விழுந்துடப்போறே!”
யாரோ வழிப்போக்கன்! வழிப்போக்கன் கண்டதை அம்மாவிடம் சொல்லிவிட்டால்? அய்யய்யோ! போகட்டும் . சாகசத்தின் போது இப்படி நமது பக்கமும் இழப்புகள் ஏற்படுவது இயல்புதான். நல்ல பிள்ளையாக திரும்பி நடந்து ஆமணக்குச்செடியின் அடர்ந்த கிளைகளில் ஒன்றை முறித்து கைக்கோலாக்கிக் கொண்டான். குதிரையைத் தோளிலிருந்து இறக்கி வைத்து கோலால் ஒரு தட்டு”ஹூய்! டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி”குதிரையிடம் இல்லாத குளம்புகளுக்கு குரல் கொடுத்த வண்ணம் ஓடுகிறான். ஒத்தை டயராக இருந்தால் லொடக்கு லொடக்கு என்று நொண்டி நொண்டித்தான் ஓடும். ஓட்டை இல்லாத டயரை சைக்கிள் கடைத் தாத்தா சும்மா கொடுப்பாரா? ஓட்டை இருக்கிற டயரையே இரண்டாக வாங்கி வந்து ஒன்றுக்குள் ஒன்றைத் திணித்து நல்ல கனமான, மதர்த்த குதிரையை தயார் செய்திருக்கிறான்.எல்லாம் சரி….அம்மா வாங்கி வரச் சொன்னதென்ன? அடப்பாவமே மறந்து விட்டதே? குதிரை நிற்காமல் ஓடுகிறது.
டக்கிடி டக்கிடி டக்கிடி டக்கிடி
குதிரைப் பாடல்களில் நினைவில் இருந்த ஒன்றின் சரணத்து வரிகள் தானாக மாறின,
“ அம்மா எதையோ வாங்கி வரச்சொன்னாள்
அதற்குள் நான் அதை மறந்தேனே…..அஅ ஆ…ஆ….
அம்மா எதையோ வாங்கி வரச்சொன்னாள்
அதற்குள் நான் அதை மறந்தேனே…..
மறுபடி போனால் திரும்பவும் கேட்டால்
உதை விழும் அய்யோ.. நான் மாட்டேன்…… ”
பல்லவி தானாக சேர்ந்து கொண்டது
”அச்சம் என்பது மடமையடா..
அஞ்சாமை திராவிடர் உடமையடா…”
எல்லாம் இந்தக் கைக்கோலால் வந்த வினை.அது மட்டும் விழாமல் இருந்திருந்தால் வாங்க வேண்டிய சாமான்களையே பாட்டாக படித்துக் கொண்டு வந்திருப்பான்… வழக்கமாக அதுதான் நடக்கும். இன்றைக்கு மறந்து போனானே?
“ஹேய்… குதிரையை எடுக்கும் போது என்னவோ முணுமுணுத்தேனே?”
”அரை மூடித் தேங்காய்…. கால் கிலோ அஸ்கா…..”
வந்துவிட்டது… நினைவுக்கு வந்துவிட்டது. நினைவு திரும்பிய மகிழ்வில்… மளிகைக் கடைக்கார முசுலியார் உடைக்கப் போகிற தேங்காயை… அதிலிருந்து வழியும் சர்க்கரைத்தண்ணீரை…. இவன் அதைக் குடிக்க வாய் பிளந்து அண்ணாந்து நிற்பதை…. முசுலியார் தனது ’கீத்து’ போடும் கத்தியும் சுத்தியலும் ஒன்றேயான ஆயுதத்தால் தேங்காயின் விரிசலை விரிப்பதை….. ஓட்டின் உள்ளிருந்து தேங்காயே அவனைப் பார்த்து சிரிப்பதை…. கழுத்து நெஞ்சு வயிறு எல்லாம் நனைய வழிந்தோடுகிற இனிப்பை…. சகலத்தையும் நினைத்து சப்புக் கொட்டிக் கொண்டான்…. கடையும் வந்து சேர்ந்தது. மறந்து போய் நினைவுக்கு வந்தது, இவ்வளவு நேரமும் சொல்லிக் கொண்டது,பாடிக் கொண்டும் வந்தது. அதை முசுலியாரிடம் சொல்லும் போது ஒரு நொடி நிலைதடுமாறி தலையும் வாலும் மாறி இருந்தது.
”கால்கிலோ தேங்காய், அரை மூடி அஸ்கா”
ஆனால் முசுலியார் அந்த விடுகதையை லகுவாக அவிழ்த்தார்
”அரை மூடித் தேங்காயா?”
முழுத்தேங்காயை எடுத்து குலுக்கியவாறே இவனைப் பார்த்தார்
” குடிக்கிறியா?....ஆ காட்டு”
வண்டியைத் திருப்பிக் கொண்டு வரும் வழியில் மீண்டும் அதே பாட்டு வரிகள் புதிது…
”அரை மூடித் தேங்காய் கால் கிலோ அஸ்கா…..”
அவரைக்காய் அதுவும் வேணும்
முழுசாத் தேங்காய், முசுலியார் உடைத்தால்,
தேங்காய் தண்ணியை நான் குடிப்பேன் ”
”ஹேய்…. அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா”
000
நோய்தொற்று பரவலைத் தடுக்க அடைவுக்குள்ளிருந்துகொண்டே குழந்தைகளுக்கு காணொலி வாயிலாக வகுப்பெடுக்கிற முயற்சிகளில் இருக்கிறாள் மழலையர்ப் பள்ளி ஆசிரியையான என் மனைவி. அவளது கைப்பேசிக்குள் ஒரு சித்திரச்சிறுமி பாடுகிறாள்…
”அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா! குண்டுப்பழம் கொண்டு வா!”
இந்தப் பாடலை இயற்றியவர் ’பிள்ளைக் கவியரசு’ அழ. வள்ளியப்பா என்பது தெரிந்து இணையத்தைத் திறந்து அவரைப் பற்றிய செய்திகளை வாசித்தேன். அதுதான் என் ரப்பர் குதிரையை திரும்பவும் ஓட்டி வந்தது. வள்ளியப்பா தனது பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே இருந்த நான்கு கிலோ மீட்டரைத் தன் புது மெட்டைக் கொண்டு கடப்பாராம். கூடவே நடக்கும் நண்பர்களும் சேர்ந்து பாடுவார்களாம். அந்தக் குருவிகளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இந்தத் திருக்கூட்டம் பள்ளி சென்று திரும்பும் வழியில் ஒரு சினிமாக் கொட்டகை இருந்திருக்கிறது. The lost jungle என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை ‘காணாத காடு’ என்று மொழிபெயர்த்து வைத்திருந்த சுவரொட்டியைப் பார்த்திருக்கிறார். உடனே,
‘காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு’
என்று தலைவருக்குப் பாட்டு பொத்துக் கொண்டிருக்கிறது. இந்த மழலைக் கவிச்செம்மலின் பாடல்கள் பஞ்சவர்ணக் கிளிகள் அல்ல.ஒரே நிறத்திலான பச்சைக் கிளிகள் அல்லது ஊர்க்குருவிகள் அல்லது’பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம்’’தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?பங்கு போட்டுத் தின்னலாம்’’கிட்டு நான்கு லட்டு பட்டு நான்கு லட்டு’ஆளுக்குப் பாதி’என்றெல்லாம் பகிர்ந்து உண்ணுவதையே போதிக்கிற காகங்கள்.வள்ளியப்பா பள்ளிப்படிப்பை முடித்த கையோடு வங்கிப் பணிக்குச் சேர்ந்தார், பணிபுரிந்து கொண்டே குழந்தை இலக்கியம் சமைத்தார், தன்னைப் போன்ற குழந்தைக் கவிஞர்களை ஊக்குவித்து வந்தார், பாட்டிலே காந்தி கதை, ஈசாப் நீதிக் கதைகள் உட்பட பல நூல்கள் எழுதினார் போன்ற செய்திகள் விரவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. வாக்கியங்கள் ஆள் நடமாட்டமில்லாத நெடுஞ்சாலைகள். கண்கள் அவைகளின் மேல் அதி வேகமாக ஓடும் வாகனத்தைப் போல கடந்து கொண்டிருக்க ‘குழந்தை இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே மயங்கிச்சாய்ந்து பின்பு மறைந்தார்.’ ’உயிர் பிரிந்த போது அவரது கைவிரல்கள் எழுதுகோலைப் பிடித்திருத்திருந்தது போல இருந்தது’ என்கிற தகவல்கள் சற்றே உயரம் கூடுதலான வேகத்தடைகள். வண்டி நிதானித்தே கடந்தாக வேண்டும்.
குழந்தைகளுக்கான எளிய கலைவடிவங்களை, முன்னெடுப்புகளை, நீதிக்கதைகளை ஏளனம் செய்கிறவர்கள் குழந்தைகளுக்கு என்னசொல்லித் தரலாம் என்பதைச் சொல்லலாம். இங்கே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே வரிசைதான். அவர்களுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை. வயது வந்தோர்களுக்கான பாடல்களே குழந்தைகளுக்கும். நம்மையறியாமல் பிஞ்சுகளுக்குப் புகை போடுகிறோமா? இந்தக் கேள்விகளுக்கிடையே நாம் அழ. வள்ளியப்பாவைப் பார்க்க வேண்டும். அவரது வாழ்நாள் முழுக்கச் செய்து வைத்திருக்கிற மகத்தான பணிகள் உன்னதமானவை. வணங்குதலுக்குரியவை.
அரவிந்த் குப்தா என்கிற கலைஞர் குழந்தைகளுக்காக படைக்கிற வேடிக்கை விளையாட்டுப் பொருட்களில் ஒன்று கரணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனுள் அவர் கோலிக் குண்டுகளை இட்டுப் பொதிந்திருக்கிறார். உள்ளிருக்கும் கோலிக்குண்டுகள் அந்தப் பொம்மையை உருளச்செய்கின்றன. வள்ளியப்பாவின் கோலிக்குண்டுகளில்தான் எத்தனை குதூகலம். குழந்தைகள் பெரியவர்களாகி விடுகிறார்கள் கோலிகள் அப்படியே அடுத்தடுத்த குழந்தைகளிடம் புத்தம் புதிதானவைகளாக மிளிர்ந்து கொண்டே இருப்பது எப்படி? ”அம்மா இங்கே வா…வா ஆசை முத்தம் தா..தா” என்பது பழைய பாடலா ? இசையும் மொழியும் எளிய வடிவில் எப்போதும் சுரந்தேயிருக்கும் இதுதான் ’என்றும் புதிய’தின் தன்மையா? ஓசையின் தித்தித்திப்பும் தாளகதியின் அடிப்படையும் இயல்பாக உள்ளோடியிருக்கும் இதுதான் எளிமையின் பிரம்மாண்டமா? இரண்டாயிரம் ரூபாய் நோட்டிலும் ஒரு அரையாடைதான் புன்னகைக்கிறதா? தேவாலயத்தில் அத்தனை பேரும் கூடித்தொழுவது உச்சியில் தொங்கும் கிழிபட்ட ஆட்டிடையனின் கோவணத்தைத் தானா?
”அணிலே, அணிலே, ஓடிவா!அழகு அணிலே ஓடிவா!
கொய்யா மரம் ஏறிவா! குண்டுப்பழம் கொண்டு வா!”
இந்தப் பாடலை இயற்றியவர் ’பிள்ளைக் கவியரசு’ அழ. வள்ளியப்பா என்பது தெரிந்து இணையத்தைத் திறந்து அவரைப் பற்றிய செய்திகளை வாசித்தேன். அதுதான் என் ரப்பர் குதிரையை திரும்பவும் ஓட்டி வந்தது. வள்ளியப்பா தனது பள்ளிக்கும் வீட்டுக்கும் இடையே இருந்த நான்கு கிலோ மீட்டரைத் தன் புது மெட்டைக் கொண்டு கடப்பாராம். கூடவே நடக்கும் நண்பர்களும் சேர்ந்து பாடுவார்களாம். அந்தக் குருவிகளின் உற்சாகம் எனக்கும் தொற்றிக்கொண்டது. இந்தத் திருக்கூட்டம் பள்ளி சென்று திரும்பும் வழியில் ஒரு சினிமாக் கொட்டகை இருந்திருக்கிறது. The lost jungle என்கிற ஆங்கிலத் திரைப்படத்தை ‘காணாத காடு’ என்று மொழிபெயர்த்து வைத்திருந்த சுவரொட்டியைப் பார்த்திருக்கிறார். உடனே,
‘காணாத காடு
கண்டுவிட்டால் ஓடு
ஒளிய இடம் தேடு’
என்று தலைவருக்குப் பாட்டு பொத்துக் கொண்டிருக்கிறது. இந்த மழலைக் கவிச்செம்மலின் பாடல்கள் பஞ்சவர்ணக் கிளிகள் அல்ல.ஒரே நிறத்திலான பச்சைக் கிளிகள் அல்லது ஊர்க்குருவிகள் அல்லது’பாதிப் பழம் உன்னிடம் பாதிப் பழம் என்னிடம்’’தங்க நிற மாம்பழம் உங்களுக்கும் வேண்டுமா?பங்கு போட்டுத் தின்னலாம்’’கிட்டு நான்கு லட்டு பட்டு நான்கு லட்டு’ஆளுக்குப் பாதி’என்றெல்லாம் பகிர்ந்து உண்ணுவதையே போதிக்கிற காகங்கள்.வள்ளியப்பா பள்ளிப்படிப்பை முடித்த கையோடு வங்கிப் பணிக்குச் சேர்ந்தார், பணிபுரிந்து கொண்டே குழந்தை இலக்கியம் சமைத்தார், தன்னைப் போன்ற குழந்தைக் கவிஞர்களை ஊக்குவித்து வந்தார், பாட்டிலே காந்தி கதை, ஈசாப் நீதிக் கதைகள் உட்பட பல நூல்கள் எழுதினார் போன்ற செய்திகள் விரவிக் கிடப்பதைப் பார்க்க முடிந்தது. வாக்கியங்கள் ஆள் நடமாட்டமில்லாத நெடுஞ்சாலைகள். கண்கள் அவைகளின் மேல் அதி வேகமாக ஓடும் வாகனத்தைப் போல கடந்து கொண்டிருக்க ‘குழந்தை இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்த போதே மயங்கிச்சாய்ந்து பின்பு மறைந்தார்.’ ’உயிர் பிரிந்த போது அவரது கைவிரல்கள் எழுதுகோலைப் பிடித்திருத்திருந்தது போல இருந்தது’ என்கிற தகவல்கள் சற்றே உயரம் கூடுதலான வேகத்தடைகள். வண்டி நிதானித்தே கடந்தாக வேண்டும்.
குழந்தைகளுக்கான எளிய கலைவடிவங்களை, முன்னெடுப்புகளை, நீதிக்கதைகளை ஏளனம் செய்கிறவர்கள் குழந்தைகளுக்கு என்னசொல்லித் தரலாம் என்பதைச் சொல்லலாம். இங்கே குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும் ஒரே வரிசைதான். அவர்களுக்கென்று தனிப்பாடல்கள் இல்லை. வயது வந்தோர்களுக்கான பாடல்களே குழந்தைகளுக்கும். நம்மையறியாமல் பிஞ்சுகளுக்குப் புகை போடுகிறோமா? இந்தக் கேள்விகளுக்கிடையே நாம் அழ. வள்ளியப்பாவைப் பார்க்க வேண்டும். அவரது வாழ்நாள் முழுக்கச் செய்து வைத்திருக்கிற மகத்தான பணிகள் உன்னதமானவை. வணங்குதலுக்குரியவை.
அரவிந்த் குப்தா என்கிற கலைஞர் குழந்தைகளுக்காக படைக்கிற வேடிக்கை விளையாட்டுப் பொருட்களில் ஒன்று கரணம் அடித்துக் கொண்டே இருக்கிறது. அதனுள் அவர் கோலிக் குண்டுகளை இட்டுப் பொதிந்திருக்கிறார். உள்ளிருக்கும் கோலிக்குண்டுகள் அந்தப் பொம்மையை உருளச்செய்கின்றன. வள்ளியப்பாவின் கோலிக்குண்டுகளில்தான் எத்தனை குதூகலம். குழந்தைகள் பெரியவர்களாகி விடுகிறார்கள் கோலிகள் அப்படியே அடுத்தடுத்த குழந்தைகளிடம் புத்தம் புதிதானவைகளாக மிளிர்ந்து கொண்டே இருப்பது எப்படி? ”அம்மா இங்கே வா…வா ஆசை முத்தம் தா..தா” என்பது பழைய பாடலா ? இசையும் மொழியும் எளிய வடிவில் எப்போதும் சுரந்தேயிருக்கும் இதுதான் ’என்றும் புதிய’தின் தன்மையா? ஓசையின் தித்தித்திப்பும் தாளகதியின் அடிப்படையும் இயல்பாக உள்ளோடியிருக்கும் இதுதான் எளிமையின் பிரம்மாண்டமா? இரண்டாயிரம் ரூபாய் நோட்டிலும் ஒரு அரையாடைதான் புன்னகைக்கிறதா? தேவாலயத்தில் அத்தனை பேரும் கூடித்தொழுவது உச்சியில் தொங்கும் கிழிபட்ட ஆட்டிடையனின் கோவணத்தைத் தானா?
Friday, 29 May 2020
தேவகுமாரன் ஒரு சல்லிப்பயல் - யோவான் மதுரையிலிருந்து எழுதிய சுவிஷேசம்
ஆத்தாளும் மயனுமா,
சாராயத்த காச்சிப்புட்டு....
ஏழவீட்டு கலியாணமுனு
சாக்கு சொன்ன சல்லிப்பய...
சாராயத்த காச்சிப்புட்டு....
ஏழவீட்டு கலியாணமுனு
சாக்கு சொன்ன சல்லிப்பய...
பொம்பள சகவாசமும்
ருசுவாயிப்போச்சு.....
தைலந்தேக்க ஒருத்தி,
இந்தா..ஏட்டையா முன்னாலயே
மொகந்தொடைச்சா இன்னொருத்தி
வேசியளுக்கு ஜாமீனா நின்ன பய,
கோயில் தெருக்கடய ஒடச்சி
தலமறவா திரிஞ்சவந்தேன்...
அவுக அப்பன் சொத்தாம்ல?
காடுமலைகொகையெல்லாம்
ரகசிய கூட்டம் போட்டா
நக்ஸலைட்டுன்னு சொல்லாம
கொஞ்சுவாய்ங்களாக்கும்?
அவெங் கூட்டாளிப்பயக,
வாரண்டு கொண்டுவந்த
போலீசுக்காரன் காதை
அறுத்துப்புட்டாய்ங்கம்மா....
போலீசுக்காரன் காதை
அறுத்துப்புட்டாய்ங்கம்மா....
சும்மா வுடுமா கெவுருமெண்டு?
வேற ஒரு கேசுல சோடனையப்பண்ணி
திருட்டுப்பயலுவலோட
தொங்க விட்டாய்ங்க...
செத்தானா பாவி ?
ஆயிரம் வருஷமா
அழகுபெத்தபுள்ளயா
இங்ஙனயே திர்ராம்யா...
ஆயிரம் வருஷமா
அழகுபெத்தபுள்ளயா
இங்ஙனயே திர்ராம்யா...
செத்த ஆள ஏன்டா
சாகவிட மாட்றீயண்டு
சாகவிட மாட்றீயண்டு
எவனக்கேட்டாலும்
என்னா சொல்றாய்ங்க.... தெரிமா?
'சல்லிப்பய ஒரு மகத்தான மனுஷன்'றாக...
Monday, 27 April 2020
நான்கு சக்கரங்களில் நகரும் குட்டியானை
வெற்றிநடைபோடும் சிக்கல் வாழ்க்கையில்
ஓட்டுனர் சுமையாள் என்னும்
இருவேடங்களைத்தாங்கி
வலம்வரும் நஞ்சப்பன்
தனது குட்டி யானையின் நெற்றியில்
சிங்கம்லே
என்றெழுதி வைத்திருக்கிறார்
கடவுள்துணை என்பதாகவும்
ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அவர்
கடவுள் தனியாக இருப்பது நல்லதல்ல எனக்கண்டு
புலிக்குட்டி எலிக்குட்டி என
பெயரன் பெயர்த்திகளின்
செல்லப்பெயர்களையும் இட்டு வைத்திருக்கிறார்
மாதத்தவணைகளில் துவங்கி
லொட்டு லொசுக்குகளில்
தொடரும் பட்டியல்
வாகனத்தின் முன் நீளுகிறதொரு
நெடுஞ்சாலையென
எத்தனையாவது ஆயிரம் கிலோமீட்டரில்
அது முடிவுறும் என்பதுதான் பெருங்கேள்வி
ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில்
அசந்துறங்கும் சிங்கத்தின் மேலேறி
வலையிழைகள் அறுந்து விழும்படிக்கு
விளையாடுகிறது சுண்டெலி.
ஓட்டுனர் சுமையாள் என்னும்
இருவேடங்களைத்தாங்கி
வலம்வரும் நஞ்சப்பன்
தனது குட்டி யானையின் நெற்றியில்
சிங்கம்லே
என்றெழுதி வைத்திருக்கிறார்
கடவுள்துணை என்பதாகவும்
ஸ்டிக்கர் ஒட்டியிருக்கும் அவர்
கடவுள் தனியாக இருப்பது நல்லதல்ல எனக்கண்டு
புலிக்குட்டி எலிக்குட்டி என
பெயரன் பெயர்த்திகளின்
செல்லப்பெயர்களையும் இட்டு வைத்திருக்கிறார்
மாதத்தவணைகளில் துவங்கி
லொட்டு லொசுக்குகளில்
தொடரும் பட்டியல்
வாகனத்தின் முன் நீளுகிறதொரு
நெடுஞ்சாலையென
எத்தனையாவது ஆயிரம் கிலோமீட்டரில்
அது முடிவுறும் என்பதுதான் பெருங்கேள்வி
ஞாயிற்றுக்கிழமையின் பிற்பகலில்
அசந்துறங்கும் சிங்கத்தின் மேலேறி
வலையிழைகள் அறுந்து விழும்படிக்கு
விளையாடுகிறது சுண்டெலி.
Tuesday, 21 April 2020
ஒலிபரப்பு
நீர்க்குழாயின் உள்ளிருந்து
எத்தனைக்குரல்கள்.
பேசிக்கொண்டே சமைக்கிறவள்
குக்கர்விசில்
குழந்தையின் ஓலம்
சிறுமியின் வாதம்
வண்டிக்காரனின் பழையமெட்டு
சுவர்க்கோழி
சூறைக்காற்று
நேற்றைய பாடல்
நாளைய மறியல்
மழைத்துளிகள்
காட்டுத்தீ
புறப்படும் ரயில்
புரளும் கிழவன்
பெருமூச்சு
அபான வாயு......
சும்மா இருக்கும்போது
மனப்பாடம் செய்துவிட்டு
யாரைப்பார்த்தாலும்
ஒப்பித்துக்கொண்டேயிருக்கிறது பைத்தியம்!
எத்தனைக்குரல்கள்.
பேசிக்கொண்டே சமைக்கிறவள்
குக்கர்விசில்
குழந்தையின் ஓலம்
சிறுமியின் வாதம்
வண்டிக்காரனின் பழையமெட்டு
சுவர்க்கோழி
சூறைக்காற்று
நேற்றைய பாடல்
நாளைய மறியல்
மழைத்துளிகள்
காட்டுத்தீ
புறப்படும் ரயில்
புரளும் கிழவன்
பெருமூச்சு
அபான வாயு......
சும்மா இருக்கும்போது
மனப்பாடம் செய்துவிட்டு
யாரைப்பார்த்தாலும்
ஒப்பித்துக்கொண்டேயிருக்கிறது பைத்தியம்!
இடம் பெயர்தல்
நான் நிறுத்திக் கொண்டேன்.
உனக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருப்பதை.
நதியை வழி நடத்துவது போலொரு
முட்டாள்தனம்.
உஷ் உஷ் என்று இத்தனை தடவை கடலை கண்டிப்பது.
புதிய ஊரின் பழைய சாளரம்
வெளியே தூரல்...
பேசுவது போலவும் பேசாதது போலவும்.
அப்புறம் இங்கே காற்றெங்கும் கடல்தான்.
அலையோசை இன்றி..
உனக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருப்பதை.
நதியை வழி நடத்துவது போலொரு
முட்டாள்தனம்.
உஷ் உஷ் என்று இத்தனை தடவை கடலை கண்டிப்பது.
புதிய ஊரின் பழைய சாளரம்
வெளியே தூரல்...
பேசுவது போலவும் பேசாதது போலவும்.
அப்புறம் இங்கே காற்றெங்கும் கடல்தான்.
அலையோசை இன்றி..
Thursday, 19 March 2020
வண்டிப்புகை
ஓய்வாய் மேசையில்
படுத்துக் கிடக்கும் பேனா
இடுங்கியிடுங்கி விரியும்
குட்டிக்கண்களுக்கு
காலத்திலுறைந்த
ரயில்வண்டியாய் தெரிகிறது.
இருதயத்துக்கு
அருகாமையிலிருக்கிறது
சட்டைப்பை.
விடாமல் அதைப்பற்றிக் கொள்கிறது
காற்றிலுறைந்த
வண்டிப்புகை.
படுத்துக் கிடக்கும் பேனா
இடுங்கியிடுங்கி விரியும்
குட்டிக்கண்களுக்கு
காலத்திலுறைந்த
ரயில்வண்டியாய் தெரிகிறது.
இருதயத்துக்கு
அருகாமையிலிருக்கிறது
சட்டைப்பை.
விடாமல் அதைப்பற்றிக் கொள்கிறது
காற்றிலுறைந்த
வண்டிப்புகை.
Tuesday, 17 March 2020
எப்படி?
பதில் தருவீர்கள் தானே குருவே ?
அதில் என்ன சந்தேகம்?
சந்தேகம்தான் கேள்வியே..
சிலையாவது அப்புறம்.
கல்லாக முடிகிறதா புத்தா?
Friday, 13 March 2020
தேய்வழக்கு
கைவசம்
உள்ளவற்றில்
மகோன்னதமான
ஒன்றைத்தேர்ந்து
உங்களுக்கு
பரிசளித்துவிடத்
தேம்புகிறேன்.
கந்தலும்
பழுப்புமாய்
இதுதான்
வந்து நிற்கிறது.
நமது கிழங்களின்
மாரில்,மடியில்,
விரல்களில்,
தசைமடிப்புகளில்
தேங்கியிருந்து
நாய்க்குட்டியின்
ஊமைக்கண்ணில்
வழிகிறதும்
அரதப்பழசுமான
அதே அன்பு
Tuesday, 3 March 2020
நெடுநாள் பாரம்
நல்ல ரசிகனவன்
சாளரம் மறையுதென்றே
மல்லிப்பந்தல் கொடியறுத்தான்.
முறுவலின் திரைகளென்று
உதடுகளைக் கத்தரித்தான்.
மாராப்பில் இருநிலவு
இரண்டிலும் பெருங்குறைகள்
உச்சிக்குமிழ்களில்
இத்தனை ஒழுங்கெதற்கு
அழகு செய்யப் பழுத்த பென்சில்
விரலிடையே புகை பரப்ப
மூர்க்கனவன்அருங்கலைஞன்
எனக்குத்தான் கட்டுபடியாகவில்லை.
பின்மதியப் பொழுதில்
மடியிருந்த தலையை
மெல்ல இறக்கி வைத்து
காற்று கலைத்து விடாதிருக்க
அம்மியை அதன் மேல் வைத்தேன்.
சாளரம் மறையுதென்றே
மல்லிப்பந்தல் கொடியறுத்தான்.
முறுவலின் திரைகளென்று
உதடுகளைக் கத்தரித்தான்.
மாராப்பில் இருநிலவு
இரண்டிலும் பெருங்குறைகள்
உச்சிக்குமிழ்களில்
இத்தனை ஒழுங்கெதற்கு
அழகு செய்யப் பழுத்த பென்சில்
விரலிடையே புகை பரப்ப
மூர்க்கனவன்அருங்கலைஞன்
எனக்குத்தான் கட்டுபடியாகவில்லை.
மடியிருந்த தலையை
மெல்ல இறக்கி வைத்து
காற்று கலைத்து விடாதிருக்க
அம்மியை அதன் மேல் வைத்தேன்.
Friday, 28 February 2020
ஹமாரா பஜாஜ்
பெட்டியை பக்கவாட்டில்
மாட்டிக்கொண்டு திரியும் பஜாஜ் CD 100-க்கு
லேடி பேர்ட்-ஐப் பார்க்கும்போதெல்லாம்
நரம்பு முறுக்கிக் கொள்ளவும்
மாட்டிக்கொண்டு திரியும் பஜாஜ் CD 100-க்கு
லேடி பேர்ட்-ஐப் பார்க்கும்போதெல்லாம்
நரம்பு முறுக்கிக் கொள்ளவும்
சைக்கிளை வழிமறித்து
ஆக்டிவா மாதிரி வைத்துக் கொள்வதாக சொன்னபோது
பச்சைக்கிளிகள் ஆலோலமிட்டன.
ஆக்டிவா மாதிரி வைத்துக் கொள்வதாக சொன்னபோது
பச்சைக்கிளிகள் ஆலோலமிட்டன.
ஆலஞ்சடை திருகி
வெட்கிய சைக்கிளை
ஆரத்தழுவிய பொழுதுகளில்
அது றெக்கையுதறி வானுக்குத்தாவும்.
வெட்கிய சைக்கிளை
ஆரத்தழுவிய பொழுதுகளில்
அது றெக்கையுதறி வானுக்குத்தாவும்.
பெட்டிக்குள் காமசூத்ராவை பத்திரப்படுத்தும்போது
பார்பிபொம்மையும் தண்ணீர் துப்பாக்கியும்
இருப்பது கண்டு
நாக்கைக் கடித்துக்கொள்ளும் நமது பஜாஜ்
அப்புறமாய் விசிலடிக்கவும் செய்தது.
பார்பிபொம்மையும் தண்ணீர் துப்பாக்கியும்
இருப்பது கண்டு
நாக்கைக் கடித்துக்கொள்ளும் நமது பஜாஜ்
அப்புறமாய் விசிலடிக்கவும் செய்தது.
விதி வலுத்த நாளொன்றில்
ஆக்டிவா கருத்தபல்ஸரின் தோள்சேர்ந்த கோலங்கண்டு
அது உடலையுதறி
வானுக்குத்தாவ முடிவு செய்தது.
ஆக்டிவா கருத்தபல்ஸரின் தோள்சேர்ந்த கோலங்கண்டு
அது உடலையுதறி
வானுக்குத்தாவ முடிவு செய்தது.
தினசரி வீட்டுக்குள்ளிருந்து
எழும்பி
குடிமேசையில் இறங்குமிந்த
துருவேறிய சைக்கிளின்
டம்ளரில்
கொஞ்சத்தை
சரித்துத் தொலையுங்களேன் ஜி.
எழும்பி
குடிமேசையில் இறங்குமிந்த
துருவேறிய சைக்கிளின்
டம்ளரில்
கொஞ்சத்தை
சரித்துத் தொலையுங்களேன் ஜி.
Thursday, 20 February 2020
தூத்தல்
ஆனைமுதுகிருந்து
தன்படையைத் தூற்றும்
தலைவனென
அந்த லாரி ஓட்டுனர்
திரும்பாமலே
எச்சிலை உமிழ்ந்தார்.
உச்சாணியிலிருந்து
அதுவொரு தூறலாக
எங்கள் மேல் விழுந்தது.
நாங்கள்
அவரை வாழ்த்தினோம்.
விட்டொதுங்குகிற
நகரத்தை……
விடாது தடுக்கிற
சமிக்ஞைத் தண்டுகளை…..
டயரில் விழுகிற
பொடிவண்டிகளை……
மழுங்கி விட்ட
சனங்களை……
தொப்பிக்குள் பதுக்குகிற
காவலரை…..
எதைக் குறித்தோ
அவர் சினந்திருக்கிறார்.
Thursday, 13 February 2020
திக்கிப்பேசுகிறவன்
வெல்டிங் பணிமனையின்
வெளிச்சப் பொறி அவன்
பேச்சு.
வார்த்தைகளைப்
பெற்றுப்புறந்தள்ள
கர்ப்பவலி தின்னும் நெஞ்சிலிருந்து
மேடேறும் குதிரைகள் மணலில்
புதைந்து திமிறுகின்றன.
கோபங்கொள்ளுகையில்
அவனது நாவுக்கு தாளம்
தப்பிவிடுகிறது
வாயிலிருந்து புறப்படும் அக்கினிஅம்புகள்
பகைஞரின் காலடியில் மல்லிப்பந்துகளாய்
மாறி விழ
மூர்க்கர்களும் மரணாயுதங்களை
தரையிலெறிந்துவிட்டு
சிறியோனை முத்தஞ்செய்வார்கள்.
மனதுருகும் வேளைகளில் நீள்குழல்விளக்குகள்
உயிருக்குத்துடிப்பதைப்போலவே
அவன் இன்னும் அதிகமாக
திக்குவான்
பொறியில் சிக்கித்துடிக்கும்
பன்றியென
அந்த உதடுகள்
துடித்திருக்க
துருப்பேறிய ஆணியை
விழுங்குவதைப்போல
நாம் நமது எச்சிலை
விழுங்க வேண்டும்.
நேற்றைக்கு அவன் என்னிடம்
தனது அன்பைச் சொன்னான்.
மற்றவர்களுடையதைக்
காட்டிலும்
கூடுதல் எடையோடிருந்த
அவனுடைய அன்பில்
எழுத்துருக்கள் திரளாயிருந்தன.
ல...லவ் யூ..... ந..நண்பா
ல...லவ் யூ..... ந..நண்பா
நூற்றியெட்டை மறித்தல்
நீரோடையில் மிதக்கும்
ஒற்றை மலர் என் வண்டி
மாலுமி பெடலைச் சுழற்றினால்
ஓடை பெருகி கடலாகும்
இந்த ஆம்புலன்ஸோ
சாக்கடையின் நடுநெஞ்சில்
ஓலமிட்டு நீந்துகிற வாத்து
அதைப் பார்த்தாலே எனக்கு எரியும்
மாற்றுத்திறனாளியானால் என்ன
அவலங்களுக்கு எதிராக
துரும்பையாகிலும் நகர்த்துவோம் என்கிறாள் தோழி
எனது மூன்று சக்கரத்தையும் நகர்த்தி
அவசரவூர்தியின் குறுக்கே போடுவேன்
அதன் அலறலும்
தொடர்ந்தோடும் வண்டிகளின் பதறலும்
தனியள் என்று என்னைப் பரிகசிப்பது போலில்லையா
ஒற்றை மலர் என் வண்டி
மாலுமி பெடலைச் சுழற்றினால்
ஓடை பெருகி கடலாகும்
இந்த ஆம்புலன்ஸோ
சாக்கடையின் நடுநெஞ்சில்
ஓலமிட்டு நீந்துகிற வாத்து
அதைப் பார்த்தாலே எனக்கு எரியும்
மாற்றுத்திறனாளியானால் என்ன
அவலங்களுக்கு எதிராக
துரும்பையாகிலும் நகர்த்துவோம் என்கிறாள் தோழி
எனது மூன்று சக்கரத்தையும் நகர்த்தி
அவசரவூர்தியின் குறுக்கே போடுவேன்
அதன் அலறலும்
தொடர்ந்தோடும் வண்டிகளின் பதறலும்
தனியள் என்று என்னைப் பரிகசிப்பது போலில்லையா
தீக்குச்சி
000
தேனீர்ப்பொழுதில்
நீளும் குச்சியில்
நீளும் குச்சியில்
ஓரிதழ் தாமரை.
அதைகும்பிட்டுக் கொள்
சிகரெட்டே.
000
தீக்குச்சி
ஒரு கன்னிப்பையன்.
ஒரு கன்னிப்பையன்.
ஆவி தீரத்தீர
காற்றில் எழுதுகிறது
தண்ணெனக் குளிர்ந்த
கருந்துளையை.
கருந்துளையை.
000
பெட்டி
தன்னிடம் சொன்னதை
அப்படியே
கைமாற்றிவிட்டுப் போனது
குச்சி.
சிகரெட்டால்
அதை
ஜீரணிக்கவே
முடியவில்லை
தன்னிடம் சொன்னதை
அப்படியே
கைமாற்றிவிட்டுப் போனது
குச்சி.
சிகரெட்டால்
அதை
ஜீரணிக்கவே
முடியவில்லை
Friday, 7 February 2020
போக்கற்றவன் கூற்று
எல்லாக் குறும்புகளையும் விட்டுவிட்டு
குடும்பத்தைத் திரும்பிப்பார்த்தான்.
அது
குண்டி மணலைத் தட்டிவிட்டு
எழுந்து போயிற்று.
குடும்பத்தைத் திரும்பிப்பார்த்தான்.
அது
குண்டி மணலைத் தட்டிவிட்டு
எழுந்து போயிற்று.
ஸ்விகிப்பையன்
விளக்கைத் தேய்க்க
பூதம் வந்த கதைதான்
ஸ்விக்கிப் பையனுடையதும்.
பூதம் வந்த கதைதான்
ஸ்விக்கிப் பையனுடையதும்.
பதறப்பதற பொதியை வாங்கி
கனலை அணிந்து பறக்கிறான்.
கனலை அணிந்து பறக்கிறான்.
காற்று தழுவ
சாம்பல் பறந்து
ஒளிர்கிறது கங்கு!
சாம்பல் பறந்து
ஒளிர்கிறது கங்கு!
'சாப்பிட நேரம் கிடைக்காது'
யாரிடமோ சொல்கிறது
பிணி தீர்க்குஞ்சிறுதெய்வம்.
யாரிடமோ சொல்கிறது
பிணி தீர்க்குஞ்சிறுதெய்வம்.
ஒரு கையை
பாக்கெட்டில் விட்டுக்கொண்டு
குழந்தை கழட்டிப் போட்டதை
வாங்குவது போல்
முகத்தை வைத்துக் கொள்கிறாய்.
பாக்கெட்டில் விட்டுக்கொண்டு
குழந்தை கழட்டிப் போட்டதை
வாங்குவது போல்
முகத்தை வைத்துக் கொள்கிறாய்.
தைரியத்திருவாளன்
காவல்காரத் தாத்தனின்
புகை வளையல்களில்
கை நுழைக்கிறாள்
அரூபப்பேத்தி.
புகை வளையல்களில்
கை நுழைக்கிறாள்
அரூபப்பேத்தி.
நூற்றுக்கணக்கில்
விதைத்தும்
சொற்ப மணிகளே
அறுவடையாகும்
ஹாலோ பிளாக்
அவென்யூக்களில்
சல்யூட் பண்ணும்
எலியின் சர்க்கஸ்
பழைய சாகஸம்
விதைத்தும்
சொற்ப மணிகளே
அறுவடையாகும்
ஹாலோ பிளாக்
அவென்யூக்களில்
சல்யூட் பண்ணும்
எலியின் சர்க்கஸ்
பழைய சாகஸம்
வீடு கைவிட்டாலும்
அடைக்கலந்தரும்
வாசல்கள் உண்டே
என்கிறது
எழுந்து நிற்கும் சவப்பெட்டி
அடைக்கலந்தரும்
வாசல்கள் உண்டே
என்கிறது
எழுந்து நிற்கும் சவப்பெட்டி
ஒருக்களித்த
வாழ்வுக்கும்
ஜால்ரா போட
ஒரு சைக்கிள்
வாழ்வுக்கும்
ஜால்ரா போட
ஒரு சைக்கிள்
வேலைமுடிந்து
வருகையில்
பூ வாங்கித் திரும்புவது
ஒருகாலம்.
கீரைக்கட்டுகளுடன்
வளைக்குள் சேர்கிறாய்.
வருகையில்
பூ வாங்கித் திரும்புவது
ஒருகாலம்.
கீரைக்கட்டுகளுடன்
வளைக்குள் சேர்கிறாய்.
அகாலத்தில்
இப்படி கை நீட்டுகிறவனை
சந்தேகமாக பார்க்காதே
வாட்சுமேன் தாத்தா
இப்படி கை நீட்டுகிறவனை
சந்தேகமாக பார்க்காதே
வாட்சுமேன் தாத்தா
நரைநெஞ்சத்தணலின்
கொஞ்சத்தை
இந்த பீடிக்கு நெருப்பாக்கு
கொஞ்சத்தை
இந்த பீடிக்கு நெருப்பாக்கு
ஒன்று சொல்லவா
உலோக மரங்களின்
ஒற்றைக் காய்களும்
பழுத்து ஒழுகும்
இந்தப் பொழுதின்
ராயன் நீதான்
ஒற்றைக் காய்களும்
பழுத்து ஒழுகும்
இந்தப் பொழுதின்
ராயன் நீதான்
Subscribe to:
Posts (Atom)
அவள் கடுங்கோபத்தோடு கேட்டாள்.
ஏன் இப்படி இருக்கிறாய்? எப்போது பார்த்தாலும் முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு குனிந்து மண்ணையே பார்த்துக் கொண்டு அல்லது மரக்கிளையைப் பார்...
-
நான் குழந்தையாயிருந்தபோது குழந்தையைப்போலப் பேசினேன் குழந்தையைப்போலச் சிந்தித்தேன் குழந்தையைப்போல யோசித்தேன் ; நான் புரு...
-
அழ வேண்டுமா சிரிக்க வேண்டுமா ஒரு எழவுந்தெரியவில்லை அந்தக் குழந்தைக்கு படுக்க வைத்திருந்தவனை கொஞ்ச நேரம் வெறித்து விட்டு அவனது வண்டியருக...
-
அண்டத்தின் எண்ணி முடியாத பால் வீதிகளில் எத்தனையோ விண்மீன் குடும்பங்கள் நீரும் காற்றும் துணைக்கொரு நிலவுமுள்ள கோளில் மிதந்து அலைகிறது சிற...