Wednesday 30 October 2019

சகோதரியை பலாத்காரம் செய்தவர்களைக் கொன்று பழிவாங்கிய புரூஸ்லீ பதினான்கு வருடங்கள் கழித்து போன மாதம் தான் விடுதலையானார்.




உப்பு காரத்தை தவிர்த்து விடுகிறார். உடற்பயிற்சிகளில் சிறந்தது நடைப்பயிற்சியே               
என்கிறார்.முன் போல உணர்ச்சி வசப்படுவதில்லை. சாதுவாக நடந்துகொள்கிறார்.
பிரச்சினைகளை நிதானமாகக் கையாளுகிறார். தூங்கும் புத்தனை வணங்கிவருகிறார்.
அண்ணன் மகளுக்கு நிஞ்ஜாக் கட்டைகளில் கயிற்றை இணைத்து ஸ்கிப்பிங் விளையாடக் கொடுத்துவிட்டார். டீ ஷர்ட்டுகளை அணிவதில்லை. முழுக்கை ஜிப்பா மட்டும்தான். விபத்துகளை பார்க்க நேர்ந்தால் முற்றத்தில் கால்களைக் கழுவிக் கொண்ட பின்பே வீட்டுக்குள் நுழைகிறார். ஆனால்.....அவர்........ அக்கிரமங்களை பார்த்துக்கொண்டு சும்மாயிருப்பதில்லை. நடு இரவில் எழுந்து கொள்கிறார். நயவஞ்சகர்களின் முதுகுத்தோலை உரித்தெடுக்கும் நான்கைந்து வரிகளை ருஷ்யப் பெயரில் பதிவிட்டபிறகே படுக்கைக்குப் போகிறார்.








No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...