Monday 3 October 2016

வரைபடக்கலைஞர் வயது 36



வழக்கமாக எட்டரை மணிக்கு
அலுவலகத்திற்கு கிளம்பும் வரைபடக்கலைஞர்
அன்றைக்கு ஆறுமணிக்கே புறப்பட்டு விட்டாராம்.
'அவனுக்கு அப்படியென்ன அவதி'
புலம்பினார் திண்ணைப் பெரியவர்.
'இஞ்சினியர் வந்துருவாரு நேரமா போணும்பானே'
முன்னறையிலிருந்து கூப்பாடு போடுகிறாள் அம்மா
பொறியாளர்  வந்து வாசலில் காத்திருந்தார்
சவரம் செய்து கொண்டார் வரைபடக்கலைஞர்
'காயம் பட்ற போதுப்பா'  
தகப்பனாரின் வேண்டுதலுக்கு செவி சாய்த்த சவரக்கடவுள்
குழந்தைக்கு செய்வது போல் கருணைபொங்கச் செய்தார்.
சற்றைக்கெல்லாம் பொறியாளர் 'போலாம்பா' என்றதும்
காய்ச்சிக் கொண்டிருந்த தப்புக்காரர் எழுந்து வாசிக்கத்துவங்கினார்.






Saturday 1 October 2016

சாஸ்திரக்காரி



வாஸ்து விகிதப்படி
கண்ணாடியணிந்திருக்கிறாய்
ஒரு தொட்டிக்கு ஒரு மீன்!

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...