Friday 17 September 2021

கன்னி மரியாளின் கிருபை

 நள்ளிரவில் 

வந்து சேர்ந்தது அந்த செய்தி

பேனா மரித்துப் போனது

பழம்பேனாக்கள் 

அடர்த்தியாய் கசிய

குழவிகள் 

சுவற்றில் முட்டிக்கொண்டு கிறுக்க 

மற்றவூர் பேனாக்கள்

முனைகளைக் கழற்றி 

அனுப்பி வைத்தன.

தங்கமுனை கிரீடத்து 

உள்வட்டம் 

மிகப் பெரிது.

பேனாக்களின் பேனா 

உண்மையில் 

பென்சிலாக இளைத்திருந்தது.

கிரீடம் 

மலர் வளையமாக 

பாவிக்கப்பட்டது.

அடிக்கடி 

காணாமல் போகும்

பேனாவுக்கென்று 

தனியாக ஒரு பெட்டி இல்லை. 

கிடைத்த இடங்களில் 

ஒண்டிக் கொண்டிருந்த அதற்கென்றே

கட்டக் கடைசியில் 

செய்யப்பட்டது

புத்தம் புதியதான மரப்பெட்டி.

குப்பைக்கிடையே 

கண்டெடுத்து

கண்ணில் 

ஒற்றிக்கொள்ளப்படும்  

கன்னிப்பேனா 

பெற்றெடுத்த 

பொன்னெழுத்தே

தேவசிசுவே

தாயை இழந்து தவிப்பாயே  

என் தங்கமே




பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...