Sunday 28 June 2020

அருள்நிறை மரியே

மருத்துவரை
உன் பொறுப்பினில் விட்டோம்
செவிலியரையுன் பாதஞ்சேர்த்தோம்
ஆமென் ஆமென் அப்படியே ஆகுக...
நோய்ப்பிணியாளரை
நினைத்துக் கொள் தாயே
தூப்புக்காரரை பார்வைக்கு வைத்தோம்
காத்துக்கொள் தாயே
கன்னி மரியாயே
ஆமென் ஆமென் அப்படியே ஆகுக
கூப்பிய கரங்களின் ஒளியுருவாக
மெழுகின் தலையும் மெல்ல அசைந்தது
ஆமென் ஆமென் அப்படியே ஆகுக...
காய்கறிக்காரர், களப்பணி செய்வோர்
பொதுப் பணியாளர் அத்தனைபேரையும்
சொல்லச்சொல்ல புரண்டன சொற்கள்
முக்காட்டுக்குள்  மரியாள் தலையசைத்துக் கொண்டேயிருந்தாள்
உன்னை காவலர்  காலடி வைக்கிறோம் என்றது பிழைதான்
ஆமென் என்றது அதைவிடப் பெரும்பிழை
நட்ட நடு ராத்திரியில்
B-7 ஸ்டேஷனின் வாசலில் நிற்கிறாள் மரியாள்
ஜோசப்பின் கூக்குரல் கேட்காதது போல்
வாய்க் கவசத்தை காதுக்கும் இழுத்தேன்

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...