Saturday 23 January 2021

அப்போதும்

 



ஊட்டுகிற 

ஒவ்வொரு பிடிக்கும்

புறங்கைச்சோற்றை

உதறிக் கொள்வாள் அம்மா

போலவே 

உதறிக்கொண்டாள்

கண்விழிக்காத குட்டிகள் 

மாரில் வந்து முட்டுவது போல 

தோட்டாக்கள் வந்த போதும்.

பொன்னை வைக்கிற இடம்



 

சிறுவனின் தலையில் திருப்புளியால் அடித்த போது துடித்துப்போனார்.
'பிரிண்டுக்கு போவதற்கு முன்பே
பாத்திருக்க வேண்டும்.
உங்களுடைய தவறுதான்.. '
'வேறேதும் வழியில்லையா?'
'நேற்று பையனின் தொடையில்
குறடால் கிள்ளினான் அந்த மெக்கானிக்..'

'மனித இருதயங்களை அவ்வளவு நேரம் உலர வைக்க வேண்டியதில்லை.... சொல்லும்போது கேட்டால்தானே? '
'பாட்டு கேட்டுக் கொண்டிருந்தது யார்?'
'அவனை செல்வந்தன் ஆக்கிவிடவா?'
'வாய்ப்பில்லை... உங்கள் பேங்க் பேலன்ஸைப் பாருங்கள்.
வாரியிறைக்கிற போது யோசித்திருக்க வேண்டும்..'
'எனக்கு கண்ணில்லாமல் போயிற்றா?'
'கவனமில்லாமல் போயிற்று அவ்வளவுதான்!'
'குற்ற உணர்ச்சி என்னைக் கொல்கிறது..'

தன்னுடைய முந்தானையில் முடிந்திருந்ததை இவருடைய மேசையில் கொட்டினாள்.
நான்கு பொன்வண்டுகள்.
'அந்தப் பையன் வருகிற வழியில் போட்டு வைப்போம்.
இப்போதைக்கு அவ்வளவுதான் செய்ய முடியும்'






ஓவியம்: ராஜ்குமார் ஸ்தபதி

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...