Saturday 23 January 2021

அப்போதும்

 



ஊட்டுகிற 

ஒவ்வொரு பிடிக்கும்

புறங்கைச்சோற்றை

உதறிக் கொள்வாள் அம்மா

போலவே 

உதறிக்கொண்டாள்

கண்விழிக்காத குட்டிகள் 

மாரில் வந்து முட்டுவது போல 

தோட்டாக்கள் வந்த போதும்.

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...