Saturday, 11 July 2020

ஜென் கூர்மம்






ஓட்டமாய் ஓடிக் கொண்டிருந்த முயலுக்கு
ஆமையின் வேகத்தை நினைத்ததும்
பொத்துக் கொண்டது சிரிப்பு

பகடியைப் பகிர்ந்து கொள்ள
நண்பர்களும் பக்கத்தில இல்லை

தனிமை துரத்த
முயல் ஓடுகிறது
ஆமையை நோக்கி

சினேகத்தைப் பாடி
நடந்தன இரண்டும்

ஆமை கழற்றிக் கொடுத்த ஓட்டை
சுமந்து பார்த்த முயலுக்கு
பொத்துக் கொண்டது அழுகை

ஆமையின் பாதச்சுவடுகளை
பணிந்து தொடர்கிறது முயல்.



No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...