Saturday, 14 September 2024

ரமணர்


என் அறையில் 

நான் மட்டும் வசித்து வந்தேன்

நான் என்னோடு  

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

ரமணரின் படம் ஒன்று

எனக்குப் பரிசாகக் கிடைத்தது 

என் அறையில்

நானும் ரமணரும் வாழ்ந்து வந்தோம்

நான் ரமணருடன்

என்னைக் குறித்துப் பேசி வந்தேன்

சில நாட்களுக்குப்பிறகு

என் அறையிலிருந்து 

நான் வெளியேற வேண்டும் 

என்று ரமணர் விரும்பினார்

அது என் அறை என்பதால் 

நான் வெளியேற மறுத்தேன்

எனவே 

ரமணர் வெளியேறினார்

என் அறையில் 

ரமணரின் படங்களுடன் 

நான் மட்டும் வாழ்ந்து வருகிறேன்.

#ஜான்சுந்தர்

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...