Tuesday 16 September 2014

அவளும் நானும் அலைபேசியும்

பைத்தியக்காரனும்
பைத்தியக்காரியும்
இன்பமாய் குலவுவதை
வெறித்துப் பார்க்கின்றன
பைத்தியங்கள்.

தொடர்ச்சியாக
பூக்கள் மலர்கின்றன                                                                                   அலைபேசியில்.

சட்டைப்பை மணக்கிறது                                                                             குறுஞ்செய்தியின் இருப்பால்.
உள்பெட்டியில் 
நிரம்பி வழிகிறது கவிதைகள்.

காதற்கடவுளை
பேட்டிகண்ட இறுமாப்பில்
வாழ்ந்துவருகிறேன்.

கொடிய நிமிடத்தின்
கடைசித் துளியில்
இசைத்துணுக்குடன்
வந்தமரும்                                                                                                  
நீயனுப்பிய குருவி.

கட்டைவிரல்
கபடியாடும்                                                                                                     இல்லாத
உறை பிரிக்க.

மோகப்பொடி தூவிய
வார்த்தைகள்                                                                                  
சொல்லித்தூண்டிவிடு
பற்றி  எரியக் காத்திருக்கிறது உயிர்.

உனக்குத் தெரியுமா
நம் அலைபேசிகளும்
ஒன்றையொன்று
காதலிக்கத்துவங்கி விட்டன .

காதலில் விழுந்தவர்களை
மொய்த்துக் கொண்டே இருக்கின்றன
குறுஞ்செய்திகள் .  


No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...