பறவைகளை
சிறைப்பிடிப்பது
வளர்த்தலாகுமா
என்பதென்
ஞானக்கேள்வி
வல்லூறுகள் பற்றிய கவலையில்லை
மேலும் சிறுதானியச்சேர்க்கைக்கான பிரயத்தனமுமின்றி
வாழ்வதிலென்னசிரமம்
என்றவனை
நீலக்கூரைக்கென்ன
செய்வாயென
மடக்கியதும்
படபடத்தான்
ஆளரவமில்லாப்
பின்னிரவில் மலைகளைத்தாண்டி
நகரத்தின் இடுக்கிலிருந்த
மண்மரப்பொந்தையடுத்துக்
கூவினேன்
மாமா என்று பதிலுக்குக்
கூவித்திறந்ததென்
பஞ்சவர்ணம்
அப்பா வந்தாச்சென
கீச்சொலியெழுப்பின
அதன் குஞ்சுகள்
No comments:
Post a Comment