Monday 13 October 2014

சிறகுகளைக்கத்தரித்தல்



பறவைகளை
சிறைப்பிடிப்பது
வளர்த்தலாகுமா
என்பதென்
ஞானக்கேள்வி

வல்லூறுகள் பற்றிய கவலையில்லை
மேலும் சிறுதானியச்சேர்க்கைக்கான பிரயத்தனமுமின்றி
வாழ்வதிலென்னசிரமம்
என்றவனை

நீலக்கூரைக்கென்ன
செய்வாயென
மடக்கியதும்
படபடத்தான்

ஆளரவமில்லாப்
பின்னிரவில் மலைகளைத்தாண்டி
நகரத்தின் இடுக்கிலிருந்த
மண்மரப்பொந்தையடுத்துக்
கூவினேன்

மாமா என்று பதிலுக்குக்
கூவித்திறந்ததென்
பஞ்சவர்ணம்
அப்பா வந்தாச்சென
கீச்சொலியெழுப்பின
அதன் குஞ்சுகள்


No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...