Saturday 20 September 2014

செல்லப் பூனைக்குட்டி



நாய்களைக் கொண்டாடுகிறேன்
என்பதால்
கோபம் கொள்கிறாய்

நீ ஒருபோதும் விசுவாசமாய்
இருப்பதில்லை பூனைக்குட்டி

எல்லா மடிகளின் சூடும்
உனக்கு வேண்டியிருக்கிறது

தினமொரு மீன் கொடுத்துவந்த
சைக்கிள்
பெருஞ்சக்கரத்தினடியில்
நசுங்கிக் கிடக்கையில்
லாரிக்காரனின்
காலையுரசிக்கொண்டிருக்கிறாய்

என் செல்லப்பூனைக்குட்டி





No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...