Saturday, 14 February 2015

வஞ்சிரத்துண்டு

பச்சை வாசம்
நிரவிக்கிடக்கும்
வாசல் உன்னது.

ஊழிமீனைக்
கையாளுவதை
பார்த்துக்
கொண்டிருந்தபோதுதான்
தொண்டைச்சங்கில்
இறங்கியது தூண்டிமுள்.


நானேதான்
இப்பவும்
மாருக்கிடையில்
பாசிமணி டாலரில்
செவுள் கிழியத்
தொங்குவது.

யாரும் பார்த்திராத
உதடுகளால்
நீ சொன்னதைத்தான்
மூச்சுக்கு தவிக்கும்
இந்தக் கெண்டைகளும்
சொல்கின்றன.

ஒருகை
நீரள்ளித்தெளித்து
விடவா

ரொம்பத்
தூண்டுகிறது
இந்த
வஞ்சிரத்துண்டு

2 comments:

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்

கவிதையின் வரிகள் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன்...

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...