Tuesday, 3 March 2015

தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து கசியும் பாடல்



கர்ப்பிணிப் பெண்ணின்
முலைகளென
பூரித்த கருணையோடு
அரவணைத்துக்கொள்கிறது
நோய்மை
இந்தக்கதகதப்பு
தனிமையில் உறைந்த
விரல்களுக்கு
எத்தனை ஆதூரமாயிருக்கிறது
உறக்கத்திற்கும்
மரணத்திற்கும்
தியானத்திற்கும்
ஊடான
குறுக்குவெட்டுப்பாதையில்
பயணிப்பது
பரமசுகம் இல்லையா
உன்னோடு பேசுவதை
உளறல் என்றால்
வா நாம் கோமாவுக்குப் போவோம்
வினோதமாய்
நிறம் மாறும்
இவர்களிடையே
என்னை
மீளக்கையளித்துவிடாதே
என் அன்பே

_காலச்சுவடு183
மார்ச் 2015

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

// மீளக்கையளித்துவிடாதே // அருமை...

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...