Wednesday 30 October 2019

கள்ளூறுஞ்சுனை

பழைய வருடங்களின் 
இனிப்பை
எச்சில் கூட்டி அருந்தும்
ஈக்களின் இறகுகள் 
காய்வதில்லை

நம்தன  நம்தன  நம்தன  நம்தன.....
அஅ..அஅ.... அஅ..அஅ....  

தித்திப்பின் 
ஈரத்தில் நனைந்த
கழுத்துப்பட்டைகள்
நாயின் நாக்கென நீள
கால்சட்டைகளின் 
கீழ்ச்சுற்றளவோ
தேவாலய மணியளவு
விரிந்து வளர்கிறது
அசட்டை செய்து 
திரிகிறதொரு பித்துக்குளி.

தய்யரத்தய்யா தய்யரத்தய்யா
தய்யரத்தய்யா தய்யரத்தய்யா

இசைகசியும் 
டீக்கடையின்
குறுகிய இருக்கைகளில்
ஈக்கள் மொய்க்கின்றன.

பால்பாத்திரத்தில் 
துடுப்பை போடுகிற
தேநீர்க்காரா 
கொஞ்சம் ஓய்வெடு  
வா 
என் பரிசலில் வந்தேறு.

ஏ குரியா குரியா குரியா தந்தேலா பாலி
ஏ குரியா குரியா குரியா தந்தேலா வாலம்

மதுக்கூடத்தில்
நாம் ராஜாவுக்கும் 
மன்னருக்கும்
வேண்டுமட்டும் 
செலவு செய்வோம்.

கைத்தாளமிட்டோர்
அவரவர் சாப்பிட்ட 
விவரம் சொல்லி
பொற்காசுகளைப் 
பெற்றுச்செல்க.
இதோ இதோ 
போதையின் உச்சத்தில்
ஆர்மோனியப் பெட்டியை 
திறக்கிறார் மன்னர்  
அமைதி காக்கச்சொல்லி 
பிச்சைக்காரனைப்போல்
கட்டளையிடும் 
பித்துக்குளியின் 
காதுமடலை
உரசியுறுமுகிறது 
ராஜாவின் பாஸ்கிடார்

தம்தம்தம் தம்தம்த தம்தம்
தம்தம்தம் தம்தம் ததம்

ஐயோ மூடர்களே
இசை நுரைத்துப்
பொங்கி வழிந்த நாட்களில்
செவியை மறைத்து 
மயிரை வளர்த்தீர்கள்.

கர்ஜனை 
எதிரொலித்த திக்குகளில்
இப்போது நரிகளின் 
மூத்திரவாடை
இந்ததேசத்தின் தண்ணீர் 
கறுத்துப் போவதை
எச்சரித்துப்போகிறது 
தேவமின்னல்.

சுழலில் சிக்கிய 
பரிசலென
சுற்றத் துவங்குகிறது 
கிராமபோன் தட்டு

ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்
ஆஹா ஒஹோ ஏஹே ஹொய்






No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...