Saturday, 2 November 2019

எழுமின்!

தாழத்தரை
வீழ்ந்த
நிழல்
மெதுவாய்
மெது மெதுவாய்
நிலமூர்ந்து
ஊர்ந்தூர்ந்து
மரம் பற்றி
கிளையேறி
வனமேறி
மலையேறி
வானேகி
இருளாகி
இரவாகி
கனிநிலவை
கவ்விற்றே காண்.


No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...