Tuesday 10 December 2019

பல்லிப் பாப்பா


முளைவிட்ட
அத்தனை கிளைகளிலும்
நட்சத்திரம் பூத்து விட்ட
புது நிறக்  குழந்தை.

செங்குத்துச் சுவரில்
எங்கே ஓடுகிறாய்
என் முத்தே?

என்ன செய்கிறாள்
பொறுப்பில்லாத உன் அம்மா ?

எந்தச் சுவரின் முக்கில் நின்று
யார் கதைக்கு 
உச்சுக் கொட்டிக் கொண்டிருக்கிறாளோ?

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...