Friday, 28 May 2021

பதினோரு மணிக்காட்சி

 




வெட்ட வெளியில் 

ஒரு  ஈ இல்லை

காக்கையும் இல்லை

மொட்டை வானம்

பளபளத்துக்  கிடக்கிறது.

வண்டிப் புழங்காமல்

கிடந்த நெடுங்காலம் 

மல்லாந்த தண்டவாளம் 

ஒருக்களித்துப் படுக்கிறது.

வெட்கம் பார்க்காமல்

அவளுங்கூட புரண்டுவிட்டால்

வெய்யில் புதர் நடுவில்

அகண்டபெரும் வெண்திரையில்

ஆயிரங்கால் பூச்சிகளின் 

ஆலிங்கனம் துவங்கிவிடும்.


No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...