Monday, 7 June 2021

பாதியில் துவங்குகிறாள்...

 மலையிடுக்கில் 

கண்விழித்தேன்.

எப்படி வந்தேன் 

இங்கே?

நெட்டி முறித்த 

கைநகத்தில் 

சிக்கிப் பறந்தது 

பஞ்சிணுக்கு

மெள்ள மெள்ள 

இறங்கிவந்தேன்.

உச்சிமயிர் 

குத்திநிற்க 

நேற்றையநாள் 

மந்தாரைச் சிமிழுக்குள் 

படுத்திருந்தேன்.

பிறிதொருநாள் 

நதியூறும்

மணற்பொடியுள்

வேறொரு நாள் 

பறவைமடிப் 

பஞ்சணையில்

குட்டியை 

ஒளித்து வைக்கும் 

தாய்ப்பூனை போலென் 

நாளைக் கவ்விப் 

பாட்டிடுக்கில் போடுகிறாள் 

நல்ல மங்கை.

ஓவியம் : இளையராஜா


No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...