Sunday, 6 February 2022

உன்னைப் போலவே

 உன்னைப்போலவே 

குருதியைச் சிந்துகிறாள்

உன்னைப்போலவே

வலியைத் தின்னுகிறாள்

என்னும் பரிதவிப்பிலே

பேணுகிறாய் மகளை

உதிரத்தின் அடர்த்தி 

வியர்வைக்கு இல்லைதான் 

ஏக்கத்திலென்ன பேதம்  

உன்னிரு முலைகளில் 

ஒன்றாகிலும் 

எனக்குரியதில்லையா அம்மா

நனைந்த கண்களை 

வெறித்த பின்

இதயப்பக்கம் இருந்ததை 

மறைத்து

மற்றதைத் திறக்கிறாய்

அடுத்த முறை 

பிறக்கும்போது

பெண் என்கிற பொத்தானை 

கவனமாய் அழுத்துவேன்.




No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...