Monday 11 April 2022

கடல் வரும்


ஒரு கையில் 

எறும்புப் பொடியும்

மற்றதில் 

அரிசி மாவும் இருக்கிறது


வீட்டு வாசலுக்கு 

கடலை

இழுத்து வருவது பற்றி 

யோசிக்கிறேன்.


என் கூரையில்

பறவையின் 

நிழல் விழலாம்.


யானைக் கூட்டம் 

வீட்டினுள் புகுந்து

வெளியேறலாம்


அடிவாரத்தை 

இதுவரை குனிந்து 

பார்க்காத நீலமலை

என் குடிசையின் மீது 

சரிந்து படுக்கலாம்.


வாசலில் 

முளைத்திருக்கும்

சின்னஞ்சிறு புற்றின்மேல்

எதைத் தூவுகிறேனோ

அதைப் பொறுத்து 

கடல் வரும் நகர்ந்து

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...