Thursday, 29 August 2024

மடி

 

பொய்யாக தலையை வைத்துப் படுக்கிறாள்

குழந்தையின் மடியில் 

மெய்யாகவே அவளைத் தாலாட்டுகிறது குழந்தை

சின்னஞ்சிறு மடியில் 

அன்னையின் தலை நிரம்பி

தரையில் வழிகிறது கூந்தல்

அதை வாரி வாரி 

மடியிலிட்டுக்கொள்கிறது குழந்தை 

பொறுத்துப் பொறுத்துப் பார்த்துவிட்டு

இடப்புறம் கிடந்த மீதவுடலும்

மயிரெனச் சுருண்டு மடியேறுகிறது.


#ஜான்சுந்தர்

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...