Tuesday, 3 September 2024

மகள்

தன்னைத்தானே

தட்டிக் கொண்டு உறங்கும் 

சிறுமியைப் பார்த்து 

உச்சு கொட்டுகிறார்கள்.

தலையில் இடி விழுந்த மறுநாளே 

மயிரையள்ளிக் கொண்டையிட்டு

செங்கல் சுமக்கப் போனவளுக்கு 

இது வியப்பில்லை

பெற்றதும் உடன்பிறந்த 

மற்றதும் உதவுமென்று

தலையைச் சொறிந்து நிற்காமல் 

தன்னைத்தானே 

சவுக்கால் விளாசிக் கொண்டு

தட்டாமாலை சுற்றுகிற 

மண்ணுருண்டையின் மகளல்லவா


#ஜான்சுந்தர்

No comments:

கண்ணே என் கீரைத்தண்டே

 கொஞ்ச நாட்களுக்கு முன்னால் நான் சென்னையிலிருந்து கோவைக்கு ரயிலில் திரும்பிக் கொண்டிருந்தேன். இரவு 11 மணி இருக்கலாம். நண்பர் செல்வேந்திரன் ...