Thursday 6 February 2020

அப்பாடா


ம்மாவின் பழைய காதல்
பந்தல் வரை வந்து நிற்க
வாசலில் இருந்த மகள்
தயங்கித் தயங்கி ‘நல்வரவு’ என்றாள்.
படியேறி அது இவளைக் கடந்தபோது
ஆசுவாசத்திலொரு வார்த்தை சொன்னாள்.
போன உயிர் திரும்பி வந்தது.
உயிரின் முகத்தில் தளும்புமிரு குளங்களிருந்தன.
குட்டிப்பையன் பன்னீர் செம்பால் மழை செய்தான்.



No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...