Thursday 6 February 2020

பூக்காடு

யோசித்து
யோசித்துப் பின்பு
மகளுக்கொரு பேர் வைத்தேன்
ரோஜா

அண்டை வீடுகளுக்கு என் மனைவி
ரோஜாம்மா- ஆகிப் போனாள்
ரோஜா அப்பா என் பெயரானது
மகனும் ஆனான் ரோஜாண்ணா

ரோஜா பொம்மை
ரோஜா வீடு
ரோஜா பென்சில்
ரோஜா ரப்பர்

எங்கள் வீட்டுத் தொட்டியிலிருந்த
பெயர் தெரியாப் பூவுங்கூட      
ரோஜாப்பூவானது அவர்களுக்கு

ஒரேயொரு பெயரை மட்டுந்தான்
நட்டு வைத்தேன் நான்                                                                  
என் வீடு மெள்ள மெள்ள 
உருமாறிக் கொண்டிருக்கிறது                                                    
கரும்பச்சை இலைகளும்
இளஞ்சிவப்பு மலர்களுமாக                   
முட்களேதுமில்லாத
பெரியதொரு ரோஜாவனமாய்.















No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...