Tuesday 3 March 2020

நெடுநாள் பாரம்

நல்ல  ரசிகனவன்
சாளரம்  மறையுதென்றே
மல்லிப்பந்தல்  கொடியறுத்தான்.
முறுவலின் திரைகளென்று
உதடுகளைக் கத்தரித்தான்.

மாராப்பில் இருநிலவு
இரண்டிலும் பெருங்குறைகள்
உச்சிக்குமிழ்களில்
இத்தனை ஒழுங்கெதற்கு

அழகு செய்யப் பழுத்த பென்சில்
விரலிடையே புகை பரப்ப
மூர்க்கனவன்அருங்கலைஞன்
எனக்குத்தான் கட்டுபடியாகவில்லை.

பின்மதியப் பொழுதில்
மடியிருந்த தலையை
மெல்ல இறக்கி வைத்து
காற்று கலைத்து விடாதிருக்க
அம்மியை அதன் மேல் வைத்தேன்.






No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...