Tuesday 21 April 2020

இடம் பெயர்தல்

நான் நிறுத்திக் கொண்டேன்.
உனக்கு அறிவுறுத்திக் கொண்டேயிருப்பதை.

நதியை வழி நடத்துவது போலொரு
முட்டாள்தனம்‌.

உஷ் உஷ் என்று இத்தனை தடவை கடலை கண்டிப்பது.

புதிய ஊரின் பழைய சாளரம்
வெளியே தூரல்...

பேசுவது போலவும் பேசாதது போலவும்.

அப்புறம் இங்கே காற்றெங்கும் கடல்தான்.
அலையோசை இன்றி..

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...