Thursday 20 January 2022

வெங்குட்டு

 எச்சுப்பேச்சே

எழுப்பாது செவலை. 

தெரிந்துதான்  

காயடிக்கிறான் வெங்குட்டு‌.

கிட்டாங்காட்டு வாழக்கொலை

பக்கத்தூட்டு சந்துவழியில் ஒன்றயடி. 

முண்டச்சிவூடுதான

வில்லங்கம் வரும்போது பாத்துக்கலாம்.

அல்லாந்தெரியிம் வெங்குட்டுக்கு.

அப்பப்ப காயடிப்பான் வெங்குட்டு.

கண்ணுமுன்ன

பித்தளை வட்டுக்

களியுருண்டையில் 

சோடியைப் போட்டேறுது  பீயுருட்டி.

அறிவான் வெங்குட்டு.

அவன் கையில் என்ன இருக்கிறது.

நடுச்சாமத்தில் கொல்லைப்படல் திறந்து மூடும் சத்தம் கேட்டும்

சொள்ளைக்கி சொரிவது போல்

நடிக்கிறான் வெங்குட்டு.

அட தெரிஞ்சுதான் என்னவண்ணப்போறான் வெங்குட்டு.

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...