Thursday 20 February 2020

தூத்தல்




ஆனைமுதுகிருந்து
தன்படையைத் தூற்றும்
தலைவனென
அந்த லாரி ஓட்டுனர்
திரும்பாமலே
எச்சிலை உமிழ்ந்தார்.

உச்சாணியிலிருந்து 
அதுவொரு தூறலாக
எங்கள் மேல் விழுந்தது.

நாங்கள்
அவரை வாழ்த்தினோம்.

விட்டொதுங்குகிற
நகரத்தை…… 
விடாது தடுக்கிற
சமிக்ஞைத் தண்டுகளை…..
டயரில் விழுகிற
பொடிவண்டிகளை……
மழுங்கி விட்ட
சனங்களை……
தொப்பிக்குள் பதுக்குகிற
காவலரை…..
 
எதைக் குறித்தோ
அவர் சினந்திருக்கிறார்.









No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...