Saturday 4 January 2020

பூக்குரல்

00


சுணங்காது
மலர்ந்திரு.
தண்டிலோடி
முந்துகிற
இலையின் பெயரே
மலர்.


00


ஓரிருநாள்
பூரிப்புதான்
ஆயினும் என்ன?
கும்பலுள் ஒளிந்து
நிலைப்பதைக் காட்டிலும்
ஒளிர்ந்து மடி.


00



பீக்காட்டில்
பூத்தாலும்
பூ தான்
பூ.


00


மனக்குழியின்
இருள் துலக்கும்
தாவரப்பல் வெளிச்சம்


00


பைத்தியப்பூவுக்கு
சவத்தின்
மேல் கிடந்தாலும்
சிரிப்பு


00

No comments:

பேசாமடந்தை

ஊரடங்கியபின் சுருட்டைப் பற்றவைத்துக் கொள்வாள் தெரஸாக்கிழவி. குளிரடர்ந்த நாட்களின் அபூர்வக் காட்சி அது. மற்ற நேரங்களில் சுருக்குப்பை நிறைய வெ...